வேலூர் முதல் கன்னியாகுமரி வரை.. 22 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. லிஸ்ட் போட்ட வானிலை மையம்
சென்னை: தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கோவை, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர் உட்பட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளா மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பெய்த அதி தீவிர கனமழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு மாவட்டங்களில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை, திருச்சி உட்பட 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உயரதிகாரி கொலை செய்யச் சொன்னால் செய்வீர்களா? பாலியல் வழக்கில் எஸ்.பிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
22 மாவட்டங்கள்
தென் தமிழ்நாட்டில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேற்குத் தொடர்ச்சி மலை
அதேபோல நாளை மறுநாள் (அக். 22) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள்
வரும் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மதுரை சோழவந்தான், தூத்துக்குடி சாத்தான்குளம், தர்மபுரி பென்னாகரம் ஆகிய பகுதிகளில் 60 செமீ மழைப் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுவதால், தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்னிந்தியப் பகுதிகளில் வரும் அக். 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.