வளசரவாக்கத்தில் வந்து போன வாலிபர் கூட்டம்.. வீடு எடுத்து அந்த' தொழில்.. வசமாக சிக்கிய தம்பதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் கணவன்-மனைவி போல் நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர்.

அடிக்கடி இளைஞர்கள் வந்து போனதால் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இறுதியாக யாரோ கொடுத்த ரகசிய தகவலால் டூபாக்கூர் தம்பதி சிக்கி உள்ளது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகள், மற்றும் வீடுகளில் விபச்சாரங்கள் ரகசியமாக நடப்பதை தடுக்க போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

வாலிபர்கள்

வாலிபர்கள்

இந்நிலையில் சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலா நகர் 3வது மெயின் ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர்கள் சிலர் வீட்டுக்கு வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சோதனை

சோதனை

இதையடுத்து ராயலா நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வீட்டில் சோதனை செய்தபோது ஒரு இளம்பெண் மற்றும் இரண்டு நபர்கள் இருப்பது தெரியவந்தது 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

ஆப் மூலம் தொழில்

ஆப் மூலம் தொழில்

அவர்கள் விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்த், தண்டையார்பேட்டை சேர்ந்த பிலால் என்பதும் இவர்கள் இளம்பெண்ணுடன் கணவன் மனைவி என்று கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து ஆப் மூலம் பாலியல் உறவு வைக்க ஆசைப்படும் இளைஞர்களை அழைத்து வந்து இந்த வீட்டில் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இளம் பெண் மீட்பு

இளம் பெண் மீட்பு

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர் மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடி வருகின்றனர். கணவன், மனைவி போல் நடித்து வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+