அட கொடுமையே.. காதலி போனை எடுக்காததால்.. காதலன் தூக்குப்போட்டு தற்கொலை.. சென்னையில் சோகம்
சென்னை: சென்னை புளியந்தோப்பு பெரம்பூர் பேரக்ஸ் ரோடு கே எம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவரது மகன் பீட்டர் (27). திருமண மண்டபங்களில் டெக்கரேஷன் போடும் வேலை செய்து வருகிறார். இவரும், புளியதோப்பு டோபிகண்ணா பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கடந்த மூன்று ஆண்டு களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த காதலுக்கு பெண்னின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.நேற்று காலை 10 மணிக்கு பீட்டர் அவரது வீட்டில் பாத்ரூம் சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் சந்தேகம் அடைந்த அவரது தம்பி ஷாம் கதவைத் தட்டினர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போதுஅவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பீட்டர் இரும்பு பைப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார்.அதிர்ச்சியில் இருந்து மீளாத ஷாம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்ததும் அருகில் இருந்தவர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பீட்டரின் தற்கொலை குறித்து போலீசார் தீவீர விசாரணை நடத்தினார்கள்.

மூன்று ஆண்டுகளாக காதல்
முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியனாது. பீட்டரும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இருவரும் தொடர்ந்து போனில் பேசி வந்தததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

காதலி போனை எடுக்கவில்லை
பீட்டர் போன் செய்தபோது அந்த பெண் போனை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலையிலும் பலமுறை போன் செய்தும் அந்த பெண் போனை எடுக்கவில்லை என்று தெரிகிறது.இதனால் விரக்தியில் இருந்து வந்த பீட்டர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதான் பீட்டர் தற்கொலைக்கு உண்மையான காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications