ஒலிம்பியாட்: சென்னை நேப்பியர் பாலத்தில் "செஸ் தீம்!" கண்கவரும் காட்சியால் மெய் சிலிர்க்கும் மக்கள்
சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெறவிருப்பதால், சென்னை நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மீல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
செஸ் போர்டுகளில் இடம்பெறக் கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண்கவர் ஓவியத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு.
இதனால் நேப்பியர் பாலம் வழியாக செல்லக் கூடியவர்களும், செஸ் ஆர்வர்லர்களும் அங்கு ஆர்வமாக நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

44-வது செஸ் ஒலிம்பியாட்
2022-ஆம் ஆண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெறவிருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அந்தப் போட்டியை ரத்து செய்தது. இதையடுத்து அந்த வாய்ப்பு இந்தியாவுக்கு அதில் குறிப்பாக நம் தமிழகத்திற்கு 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து இதற்காக தமிழக அரசு ரூ.92 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

28-ஆம் தேதி தொடக்க விழா
இம்மாதம் 28-ஆம் தேதி நடைபெறும் சரவதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரம்மாண்ட தொடக்க விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டுத்துறை அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வருக வருக என செஸ் ஒலிம்பியாட் தீம் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அந்த வரவேற்பு பாடலில் முதல்வர் ஸ்டாலினும் ஓரிரு நிமிடங்கள் வந்து செல்கிறார்.

நேப்பியர் பாலம்
சென்னையின் பிரதான பாலங்களில் ஒன்றான நேப்பியர் பாலம் முழுவதும் செஸ் தீம்மில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. செஸ் போர்டுகளில் இடம்பெறக் கூடிய கருப்பு வெள்ளை நிறங்களில் கண்கவர் ஓவியத்தை உருவாக்கியுள்ளது தமிழக அரசு. வாகன ஓட்டிகளுக்கும், நேப்பியர் பாலம் வழியாக செல்லக்கூடிய வழிபோக்கர்கள் அனைவருக்கும் ஒரு புது வித அனுபவத்தை தரும் வகையில் இந்த ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டும் இந்த ஓவியப் பணிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்ஃபி
பொதுவாகவே நேப்பியர் பாலத்தில் நின்று செல்ஃபி எடுப்பவர்கள் ஏராளம் ஏராளம். அதிலும் இப்படியொரு புதிய தீம்மில் கண்கவர் ஓவியங்களின் பின்னணியில் நின்று செல்ஃபி எடுக்க விரும்பாதவர்கள் இருப்பார்களா என்ன. அந்த வழியாக செல்பவர்கள் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் நேப்பியர் பாலத்தை பார்வையிடுவதற்காக படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். வார விடுமுறை நாட்கள் என்பதால் பீச்சுக்கு வருபவர்கள் பலரும் அப்படியே அருகில் உள்ள நேப்பியர் பாலத்திற்கும் ஒரு விசிட் அடிக்கத் தவறுவதில்லை.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications