நீங்களே பேசி முடிச்சு முடிவெடுத்துடுங்க... நிர்வாகிகளிடம் பொறுப்பைக் கொடுத்த இ.பி.எஸ்.
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு ஊரகப் பகுதிகளில் இடம் கொடுப்பது பற்றி மாவட்டச் செயலாளர்களே முடிவெடுத்துக் கொள்ளுமாறு பொறுப்பைக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று மாலை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார் முதல்வர் எடப்பாடி .
அப்போது பேசிய அவர், கூட்டணிக் கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேசுங்கள் என்றும், பொறுமையுடன் உத்தி வகுத்து செயல்படுங்கள் எனவும் அறிவுரை நல்கியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மட்டும் ஊர்க உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த தடையில்லை என நேற்று பிற்பகல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அதிமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக தலைமையகத்தில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள்
தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகளும், மாவட்டச் செயலாளர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அவர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி, மிகுந்த கவனமுடன் களப்பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

சுமூக உறவு
கூட்டணிக் கட்சியினருடன் சுமூக உறவை பின்பற்றுமாறும், ஊரகப் பகுதிகளில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடங்கள் பற்றி மாவட்டச் செயலாளர்களே பேசி முடிவெடுத்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் மாவட்டச் செயலாளர்களுக்கு உற்சாகம் பீறிட்டுள்ளது.

தீவிர கவனம்
குறிப்பாக பிரச்சாரத்தில் மிகுந்த கவனம் செலுத்துமாறும், அரசின் சாதனைகளையும், நலத்திட்டங்களையும் மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு முதல்வர் கட்டளை பிறப்பித்துள்ளார்.
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
கருகுது இரட்டை இலை.. விஜய் வைத்த டார்கெட்! வலைவிரித்துக் காத்திருக்கும் தவெக! சிக்கும் திமிங்கலம்? -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
ரீல்ஸ் போடுங்கப்பா..ஆட்சியை பிடிக்கலாம்! அதிமுக கூட்டத்தில் அள்ளி விட்ட எடப்பாடி! ஆடிப்போன ஐடி விங்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்!












Click it and Unblock the Notifications