காலண்டரை புரட்டி புரட்டி பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்! அதிகாரிகள் ஹேப்பி! அப்படி என்ன அதில் ஸ்பெஷல்!
சென்னை: சென்னையில் புத்தககாட்சியை தொடங்கி வைத்து அரங்கத்திற்குள் ஒரு ரவுண்டு வந்த முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு தமிழ் வளர்ச்சித்துறை தயாரித்திருந்த புதுமையான மாத காலண்டர் ஒன்றை ஆர்வமுடன் புரட்டி புரட்டி பார்த்து அதிகாரிகளை பாராட்டியுள்ளார்.
முதலமைச்சர் இந்தளவுக்கு கவனித்து பார்த்த அந்த நாட்காட்டியானது, முழுக்க முழுக்க சங்க இலக்கிய பாடல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த சங்க இலக்கிய மாத நாட்காட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரின் கொடை, வீரம், வாழ்வியல் நெறிமுறை, காதல், அன்பு, அறிவியல், இயற்கையோடு இயைந்த வாழ்வு, வாணிகம் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் இந்த மாத காலண்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

சங்க இலக்கிய மாத நாட்காட்டி
சென்னை நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் 46-வது சென்னை புத்தகக் காட்சி 2023ஐ தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்ட சங்க இலக்கிய மாத நாட்காட்டியினை வெளியிட்டார். இதனை முதல்வரிடமிருந்து தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

தமிழ் இணையக் கல்விக்கழகம்
தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் வரையப்பட்ட ஓவியங்களைக் கொண்டு நாட்காட்டிகள் தயாரிக்கும் பணியைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் அறிவிப்பான 'தீராக் காதல் திருக்குறள்' என்ற திட்டத்தின் கீழ், திருக்குறளின் சிறப்பை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் விதமாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் திருக்குறள் குறளோவியப் போட்டி நடத்தப்பட்டது. இதில், 12,000 மாணவர்கள் வரைந்த ஓவியங்களில் சிறந்த 365 ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, காலவரையற்ற தினசரி நாட்காட்டியாக (Infinity Calendar) அச்சிட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தமிழரின் கொடை
இவ்வாண்டும், சங்க இலக்கியப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கிய மாத நாட்காட்டி, தமிழ் வளர்ச்சித்துறையின் தமிழ்ப் பரப்புரைக்கழகத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரின் கொடை, வீரம், வாழ்வியல் நெறிமுறை, காதல், அன்பு, அறிவியல், இயற்கையோடு இயைந்த வாழ்வு, வாணிகம் என்ற பொருண்மைகளின் அடிப்படையில் தமிழறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 சங்க இலக்கியப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

அதிகாரிகள் மகிழ்ச்சி
இவை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் ஓவியங்களாக வரையப்பட்டு, உரிய விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் மாத நாட்காட்டியாகத் தொகுக்கப்பட்டுள்ளன. முதல்வரின் மனம் கவரும் வகையில் காலண்டர் அமைந்திருந்ததால் அதை தயாரிக்கும் பொறுப்பில் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications