ரயில் பயணத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்திய ஸ்டாலின்! சென்னை டூ காட்பாடி! 2 மணி நேரம் நடந்த டிஸ்கஷன்!
ரயில் பயணத்தின் போது கூட ஓய்வெடுக்காமல் ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர்
சென்னை: சென்னையிலிருந்து வேலூருக்கு சீரடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், பயண நேரத்திலும் ஓய்வின்றி ஆய்வுக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார்.
முக்கிய கோப்புகளை கையில் வைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், தனது செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத், சண்முகம், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோரிடம் டிஸ்கஷன் செய்தவாறே பயணித்தார்.
மேலும், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

கள ஆய்வில் முதலமைச்சர்
தமிழ்நாடு வரலாற்றில் முதல்முறையாக கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை இன்று வேலூரில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும் 2 நாட்கள் வேலூரில் தங்கி மண்டல அளவினான ஆய்வுக்கூட்டங்களை நடத்தவுள்ளார். இதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடி வரை சீரடி எக்ஸ்பிரஸில் பயணித்த முதல்வர் ஸ்டாலின், பயண நேரமான 2 மணி நேரமும் முக்கிய கோப்புகளை கையில் வைத்துக் கொண்டு அது குறித்து அதிகாரிகளுடன் விவாதித்தார்.

ஓய்வுவுக்கு இடமில்லை
ரயில் பயணத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வெடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓய்வுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அதிகாரிகளை அழைத்து ஆலோசனைகள் செய்துகொண்டே பயணித்திருக்கிறார். அதிகாரிகள் மட்டுமல்ல அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடமும் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை பற்றி முதல்வர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

பெரிய டீம்
முதலமைச்சரின் தனிச் செயலாளர்கள் மட்டுமல்லாமல் மற்ற முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் முதல்வருடன் இந்த பயணத்தில் இடம் பெற்றிருக்கின்றனர். கோப்புக்களை மட்டும் வைத்துக் கொண்டே இவ்வளவு கேள்விகள் கேட்ட முதல்வர் ஸ்டாலின், கள ஆய்வின் போது இன்னும் என்னென்ன வினாக்களை முன் வைப்பாரோ என வேலூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஸ்டாலின் பதிவு
தனது ரயில் பயணம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, ''கோட்டையில் தீட்டப்படும் மக்கள் நலத் திட்டங்கள் கடைக்கோடி மனிதர் வரை சென்றடைவதை உறுதிசெய்யும் "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தினைச் செயல்படுத்த வேலூர் மண்டலம் புறப்பட்டேன். தொடர்வண்டியிலேயே ஆய்வுக்கான அடிப்படைகளை அமைத்து, பயணமாகும் பெட்டியே அலுவலகமாக ஆனது!'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications