கோவை இளம் பெண்ணுக்கு நிகழ்ந்தது மனிதத்தன்மையற்றது! கண்டிக்க கடுஞ்சொல் போதாது- ஸ்டாலின் கண்டனம்
சென்னை: கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மனிதத்தன்மையற்றது என்றும் இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்த கடுஞ்சொல்லும் போதாது என்று முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதளத்தில் கூறியிருப்பதாவது: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.

இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் மேலும் நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம்தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்; முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும்! இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் கோவையில் ஒரு கல்லூரியில் தங்கி படித்து வந்தார். அவர் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் கல்லூரிக்கு விடுமுறையால், தனது ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றாராம்.
இவர்களது கார் கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு (நவம்பர் 2) 11 மணி அளவில் காரை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
அப்போது அவ்வழியாக போதையில் வந்த 3 ஆசாமிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கார் நின்றிருப்பதை கண்டு அருகே சென்றனர். அங்கு கல்லூரி மாணவியும் ஒரு ஆணும் இருப்பதை கண்டு, அவர்களை வெளியே வருமாறு மிரட்டினராம்.
ஆனால் அவர்கள் போதையில் இருப்பதை அறிந்த இருவரும், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று காரை எடுத்தனர். அப்போது அவர்கள் 3 பேரும் சேர்ந்து காரை தடுத்து கண்ணாடியை உடைத்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அந்த ஆண் நண்பர் வெளியே வந்ததும் அவரின் தலையில் அரிவாளால் வெட்டியுள்ளனர். அதில் அவர் தலையில் இருந்து ரத்தம் வெளியேறிய நிலையில் மயங்கி விழுந்துவிட்டாராம்.
தனது ஆண் நண்பரை அரிவாளால் அந்த மூவரும் வெட்டியதை அடுத்து அந்த பெண் அஞ்சியுள்ளார். அந்த மூன்று பேரும் அந்த மாணவியை கத்தி முனையில் கடத்திச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அந்த ஆண் நண்பருக்கு நள்ளிரவு 2 மணிக்கு மயக்கம் தெளிந்து பார்த்த போது அந்த மாணவியை காணாது திடுக்கிட்டாராம். உடனே 100-க்கு போன் செய்து போலீஸாரின் உதவியை நாடினார். சம்பவ இடத்திற்கு பீளமேடு போலீஸார் வருகை தந்தனர்.
அவர்களிடம் அந்த ஆண் நண்பர் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே போலீஸார் அந்த பகுதியில் தேடினர். அப்போது புதர் மண்டிய இடத்தில் இருந்து மாணவியை போலீஸார் மீட்டனர். அந்த பெண் நீண்ட நேரமாக ஒரே இடத்திலேயே அச்சத்துடன் இருந்தாராம். இதையடுத்து அந்த பெண்ணை மீட்ட போலீஸார் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். பிறகு அந்த பெண்ணை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மாணவிக்கு கொடூரம் இழைத்த 3 பேரையும் போலீஸார் நேற்று இரவு சுட்டுப் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications