Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோயம்புத்தூரில் நின்ற கார்.. டக்னு திறந்து பார்த்த போலீஸ்.. பெண் அதிகாரியா? நிலப்பத்திரமா? அசிங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையை சேர்ந்த பெண் அதிகாரி வசமாக சிக்கியிருக்கிறார்.. அதிகாரியின் காரை திறந்து பார்த்ததுமே, அதிர்ச்சியில் உறைந்து போனார்களாம் அதிகாரிகள்.. இது தொடர்பான விசாரணையையும் கோவை போலீசார் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி... இவர், தன்னுடைய நிலத்தை பதிவு செய்துவிட்டு, அதற்கான ஒரிஜினல் ஆவணங்களை கேட்டு சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

coimbatore kovai sub registrar

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின், "ரூ.35 ஆயிரம் லஞ்சம் தந்தால் மட்டுமே ஆவணங்கள் தரப்படும்.. அதுவும், அந்த பணத்தை நீங்கள், சிங்காநல்லூர் பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக உள்ள பூபதிராஜாவிடம் தந்துவிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், தன்னுடைய சொந்த நிலத்தின் ஆவணத்தை பெறுவதற்கு எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று நினைத்த கருப்பசாமி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தந்த ஆலோசனையின்பேரில், கருப்பசாமி, ரசாயனம் தடவிய ரூ. 35 ஆயிரம் பணத்தை, பதிவுத்துறை உதவியாளர் பூபதிராஜாவிடம் கொண்டுபோய் தந்தார்.

அதை வாங்கிக்கொண்டபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதி ராஜாவை கையும் களவுமாக பணத்தை பறிமுதல் செய்தனர்.. பிறகு பூபதி ராஜாவையும், நான்சி நித்யா கரோலினையும் கைது செய்தனர்..

தொடர்ந்து நான்சியின் காரையும் சோதனையிட்டனர்.. அப்போது காருக்குள் ரூ. 13 லட்சம் ரொக்கப் பணம் இருந்திருப்பதை கண்டு அதிர்ந்தனர்.. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீஸார் ரூ.13 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். நான்சியிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

டிரான்ஸ்பர்: கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான பணத்தை பறிமுதல் செய்திருந்தனர்.. எனவே, நான்சி மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மாற்றப்படவில்லை.

காரணம், தினமும் கிடைக்கும் லஞ்சப் பணத்தை நான்சி நேரடியாக வாங்காமல், பத்திர எழுத்தர்களிடம் வாங்கி வைக்கும்படி சொல்லியிருக்கிறார்.. அப்படி இதுவரை வாங்கிய லஞ்சப்பணத்தின் மொத்த தொகை ரூ.13 லட்சமாகும்.. இந்த 13 லட்சம் வசூலான தொகையை, தன்னுடைய காரில் வைக்கும்படி பத்திர எழுத்தர்களிடம் சொல்லியிருக்கிறார் நான்சி.. அதன்படியே அவரும் லஞ்சப்பணத்தை காரில் வைத்துள்ளார்.

சோதனைகள்: இதற்கு பிறகுதான், நான்சியை சுற்றிவளைத்து கைது செய்துள்ளுர்கள்.. இதைத்தொடர்ந்து நான்சியின் வீடுகளிலும், அவரது உதவியாளர் வீட்டிலும், சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.. இதையடுத்து, நான்சி மீதான துறை ரீதியான நடவடிக்கை விரைவில் பாயும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல, கைதான நான்ஸி நித்யா கரோலின் மீது ஏற்கனவே ஏகப்பட்ட லஞ்சப்புகார்கள் அதிகாரிகளுக்கு வந்துள்ளன.. அதனால்தான், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஏற்கனவே சோதனை நடத்தி, ஒரு லட்சத்து, 50 ஆயிரத்து 50 ரூபாய் பறிமுதல் செய்திருந்தனர்.. இது தொடர்பாக, நான்ஸி மற்றும் பத்திர பதிவு எழுத்தர் அலுவலக ஊழியர் ஒருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.. இந்த நேரத்தில், 13 லட்ச ரூபாயுடன் கையும் களவுமாக நான்சி அகப்பட்டுக் கொண்டுள்ளது கோவை வருவாய்த்துறையை அதிர வைத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+