Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னா அடி.. அப்படி என்னங்க நான் சொல்லிட்டேன்! ஓடி ஒளியலை.. நாளைக்கு சென்னை வர்றேன்! மகாவிஷ்ணு வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை : நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன் என கேட்டுள்ள சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகாவிஷ்ணு, நாளை அதாவது ஏழாம் தேதி மணியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.

பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார்.

mahavishnu school education department anbil mahesh

அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய அவர் கடந்த ஜென்மத்தில் பாவ புண்ணியங்களை அடிப்படையில்தான் இந்த ஜென்மத்தில் நாம் பிறந்திருக்கிறோம்.. மாற்றுத்திறனாளிகள் ஏழைகள் அப்படி பிறந்தவர்கள் தான் என்ற ரீதியில் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இப்போது அங்கிருந்து அனைவரும் அமைதியாக இருந்த நிலையில் மாற்றுத்திறனாளியான ஆசிரியர் ஒருவர் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பள்ளிக்கூடத்தில் ஆன்மீகம் போதிக்கிறீர்கள்.. மறுபிறவி பாவ புண்ணியம் பற்றி பேசுவது என்ன நியாயம்? என வாக்குவாதம் செய்தார். இதை அடுத்து அவரை மற்ற ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மகா விஷ்ணு ஆன்மீக சொற்பொழிவு நடத்தினார்.

இதை அடுத்து அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அவருக்கு எதிராக கடும் கண்டனம் எழுந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆவேசமாகக் கூறினார். மேலும் மாற்றுத் திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக மகாவிஷ்ணு மீது சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதற்கிடையே மகாவிஷ்ணு தலைமறைவாகி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் அவர் தங்கியிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன் என கேட்டுள்ள சர்ச்சைக்குரிய பேச்சாளர் மகாவிஷ்ணு. இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில்," நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. ஓடி ஒளியக்கூடிய அளவுக்கு அப்படி என்ன கருத்தை நான் சொல்லிவிட்டேன். சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இதை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் முகுதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார்களா அல்லது பதிவு செய்யப் போகிறார்களா என்று தெரியவில்லை.

இது தொடர்பாக பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்திலும் திருப்பூரில் உள்ள எனது இல்லத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். காவல்துறையினர் அவர்களது வேலையை சரியாக செய்கிறார்கள். அதில் எந்த தவறும் கிடையாது. இந்த மாதிரி சூழ்நிலையில் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். எட்டாம் தேதி சிங்கப்பூரில் ஒரு நாள் வகுப்பு இருக்கிறது. அதற்காக ஏற்கனவே நான் டிக்கெட் போட்டிருந்தேன்.

ஆஸ்திரேலியாவில் நான் தங்க வேண்டும் என்று நினைத்தால் 3 மாதத்திற்கு எனக்கு விசா இருக்கிறது. இந்த நேரத்தில் நான் பேசுவது நன்றாக இருக்கும்/ எனது விளக்கத்தை அளிக்க கடமை இருக்கிறது. எனவே நாளை அதாவது ஏழாம் தேதி மணியம் 1.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறேன். காவல்துறை மீதும் இந்திய சட்ட திட்டங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். இந்திய சட்ட திட்டங்களை மதிப்பவன் நான்.. சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்பவன் நான்.. அதன் அடிப்படையிலும் தார்மீக அடிப்படையில் காவல்துறை மீது உள்ள நம்பிக்கை அடிப்படையிலும் நேரில் விளக்கம் அளிப்பேன்..

மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பேசியதையும் பார்க்க முடிந்தது. அவரது கோபத்தையும் சீற்றத்தையும் மிகத் தெளிவாக காண முடிகிறது. அவருக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு எனக்கு அறிவு தெளிவு இருக்கிறதா என தெரியவில்லை. அதனால் எனக்குத் தெரிந்த விஷயங்களை சென்னையில் தமிழ்நாட்டில் நான் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். என்னை குறித்து ஒரு புகார் வந்திருக்கிறது. அது தொடர்பாக விளக்கம் அளிக்க நான் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் இருக்க வேண்டும். நான் சென்னை விமான நிலையத்திற்கு நேரடியாக வந்தடைகிறேன்" எனக் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+