கொரோனா 3வது அலை : பள்ளி கல்லூரிகளை திறக்கும் சூழல் தற்போதைக்கு இல்லை - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்
கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை. பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்றார்.
முதல்வராக பதவியேற்ற பிறகு இரண்டாம் முறையாக டெல்லி சென்ற ஸ்டாலின் குடியரசு தலைவர் மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து பேசினார். தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த அழைப்பு விடுத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையில் நூற்றாண்டு விழாவில் தலைமை தாங்கி நடத்த குடியரசுத் தலைவரை அழைத்தேன். சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அழைப்பு விடுத்தேன். கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன் என்று கூறினார்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எனக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மதுரையில் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் நூலகத்துக்கு அடிக்கல் நாட்டவும் குடியரசுத் தலைவர் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார்.

எழுவர் விடுதலை குறித்து குடியரசு தலைவரிடம் எதுவும் பேசவில்லை. 7 பேர் விடுதலை விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி தர மாட்டோம் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.
கொரோனா 3ஆவது அலையை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய முதல்வர் ஸ்டாலின்,பள்ளிக் கல்லூரிகளை தற்போதைக்கு திறக்கும் சூழல் இல்லை என்றார். பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications