மக்களே உஷார் அச்சுறுத்தும் கொரோனா.. 2.7 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி.. தமிழகத்தில் 38 பேர் பாதிப்பு
சென்னை: நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்த பாதிப்பில் இருந்து பல நிறுவனங்கள் இதுவரை மீண்டு வரவில்லை. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் மாவட்ட சுகாதார அதிகாரிகள், தினந்தோறும் பாதிக்கப்படுவோர் குறித்த தகவல்களை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். படுக்கை வசதிகள், காய்ச்சல் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை தற்போது 2,710 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1,147 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலத்தில் 424 பேருக்கும், டில்லியில் 294 பேருக்கும், குஜராத்தில் 223 பேருக்கும் தொற்று நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலா 148 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பரவி வருகிறது. வதந்திதான் பெரிய நோய். கொரோனா குறித்து யார் வேண்டுமானாலும் தகவல் பரப்பலாம். பதற்றத்தை ஏற்படுத்தாமல் மக்களிடம் முன்னெச்சரிக்கையை ஏற்படுத்துவதே அவசியம்.
தமிழகத்தில் தற்போது 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகையிலான தொற்று பரவி வருகிறது. இதனால், யாரும் பதற்றமடையத் தேவையில்லை. பெரிய பாதிப்பு எதுவும் இதுவரை ஏற்படவில்லை. நுரையீரல், இதயம் போன்ற பாதிப்புக்குள்ளானவர்கள் முகக்கவசம் அணிவது நல்லது. தொற்று பாதிக்கப்பட்டவர்களின் 17 மாதிரிகள் புனே ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கை கழுவுதல், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. பொதுமக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆனால் இதில் எதுவுமே கட்டாயமில்லை. கடைப்பிடித்தால் நல்லதுதான். கொரோனா பரவலை சமாளிக்க தமிழகத்தில் போதுமான மருத்துவக் கட்டமைப்பு உள்ளது.
தனி வார்டுகளும் தயாராக உள்ளன. கொரோனா பரவலைக் கண்டு பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இந்தியாவில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் எடுத்துக் கொண்டாலும் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. சென்னையில் கொரோனா பாதிக்கப்பட் ஒருவர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவர் கொரோனாவால் இறக்கவில்லை. ஏற்கனவே உடலில் இருந்த பிரச்சனைகளால் இறந்திருக்கிறார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. அதில்தான் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சம்பந்தப்பட்டவருக்கு நீண்டநாட்களாக கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு பிரச்சனை இருந்துள்ளது என்று கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications