வந்தாச்சு கொரோனா நிவாரண நிதி ரூ.1000 .. வீடு தேடி வரும் டோக்கன்.. சூப்பர் அறிவிப்பு
சென்னை: கொரோனா நிவாரண நிதி 1000 ரூபாய்க்கான டோக்கன் வந்துவிட்டது.. இந்த டோக்கன் உங்கள் வீட்டுக்கே தேடி வருகிறது. கூட்டத்தை தவிர்க்க டோக்கன்களில் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது
Recommended Video
தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.1000 அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. நாளை முதல் அனைத்து ரேஷன் கடைகளில் பணம் மற்றும் இலவசம்க 15 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்டவை விநியோகிக்கப்பட உள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மார்ச் 24ம் தேதி சட்டசபை கூட்டத்தில் இதுபற்றி பேசுகையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
மார்ச் மாத ரேஷன் பொருட்களைப் பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் சேர்த்த பெறலாம். ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும். ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க டோக்கன் முறையில் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதன்படி டோக்கன் தயாரிப்பு பணி, மற்றும் பொருட்கள் மற்றும் பணத்தை அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து முடிந்தது. இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வீட்டிற்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனில் பணம், பொருட்கள் விநியோகிக்கப்படும் நேரம் மற்றும் நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வழங்கப்பபட்ட டோக்கன் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications