கொரோனாவிடம் சிக்கிய சென்னை.. போராளிகளாக களம் இறங்கும்.. 3000 வெளி மாவட்ட நர்ஸ்கள்
சென்னையில் கொரோனா சிகிச்சையில் பணியாற்ற கூடுதலாக 3,000 நர்ஸ்கள் வரவழைக்கப்படுகின்றனர்.
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் இருந்தும் கூடுதலாக 3000 நர்ஸ்கள் சென்னைக்கு வந்துள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோயில், கோவை, ஈரோடு மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்த நர்ஸ்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வருவது அச்சம் அளித்தாலும் நோய் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பலருக்கும் நம்பிக்கை அளிக்கிறது.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கொரோனா வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் பலரும் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களிலும் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது.
சென்னையை அடுத்து திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, மதுரை மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த கூடுதல் மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் நியமனம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து உள்ளது அதற்கான விளம்பரத்தையும் சமீபத்தில் நாளிதழ்களில் வெளியிட்டது.
தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியத்தின் மூலமாக ஏற்கனவே 2,000 நர்ஸ்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற கூடுதலாக 3000 நர்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகர்கோவில், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து 3000 பேர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர் அவர்கள் அனைவருக்கும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக படுக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 3000 நர்ஸ்கள் பணியாற்ற சென்னைக்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications