5 லட்சத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு.. இன்று தமிழகத்தில் 5495 பேருக்கு கொரோனா.. கோவையில் உச்சம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 5495 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 497066 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் 90 ஆயிரதத்திற்கும் அதிகமான கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி வருகிறது. விரைவில் தினசரி கேஸ்களில் எண்ணிக்கை 1 லட்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் தினசரி கேஸ்கள் சராசரியாக 5500-5900க்குள் உள்ளேயே இருந்து வருகிறது. பெரிய அளவில் கேஸ்கள் அதிகரிக்காமல் ஒரே அளவில் உயர்ந்து வருகிறது.

தமிழகம் எப்படி
தமிழகத்தில் இன்று 5495 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 497066 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 5 லட்சத்தை நெருங்குகிறது. நாளை தமிழகம் 5 லட்சம் கொரோனா கேஸ்கள் என்ற எண்ணிக்கையை அடைய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் 47110 பேர் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளாக உள்ளனர்.

டிஸ்சார்ஜ் எப்படி
தமிழகத்தில் 6277 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 441649 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 8307 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இன்று 76 பேர் இன்று கொரோனா காரணமாக பலி உள்ளனர்.

சென்னை எப்படி
சென்னையில் இன்று 978 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் தினசரி 900+ கேஸ்கள் சராசரியாக வருகிறது. சென்னையில் இன்று 1215 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 147591 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 10645 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

டெஸ்ட் எண்ணிக்கை
தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருங்குகிறது. 5803778 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 88562 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 86486 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 5619012 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை எப்படி
இன்று செங்கல்பட்டில் 267 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 30065 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 289 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 14180 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 428 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 21665 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications