சென்னையில் வீடுகளை தகரம் அடித்து அடைக்கமாட்டோம்: கமிஷனர் பிரகாஷ்
சென்னை: கொரோனா பாதித்தோரின் வீடுகளை தகரம் அடித்து அடைக்கமாட்டோம்: கமிஷனர் பிரகாஷ்
சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வீடுகளை தகரம் அடித்து அடைக்கும் முறை கைவிடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரோனா லாக்டவுன் கால கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் கொரோனா சோதனை மேற்கொண்டோர் எண்ணிக்கை 11 லட்சமாகும். சென்னையில் பரிசோதனைகள் எண்ணிக்கையை குறைக்கமாட்டோம்.
தொழில் நிறுவனங்கள் அனைத்தும் பணியாளர்களுக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருவோர் இனி தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.
அதேபோல் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளை தகரம் அடித்து அடைக்கும் முறையும் கைவிடப்படும். இவ்வாறு பிரகாஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications