நாடு முழுவதும்.. மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிப்பு.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை: மே 4 முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேலும் 2 வாரங்களுக்கு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
வைரஸை கட்டுக்குள் கொண்டு வர, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இது சம்பந்தமாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் அவ்வப்போது வீடியோ கான்பரஸ்மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டங்களில் மாநிலங்களில் உள்ள தொற்று பாதிப்பு, எண்ணிக்கை, செயல்பாடுகள், திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தொடர்பாகவும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

அறிவிப்பு
அப்படி நடந்த ஆலோசனையின்படிதான் மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த 14-ம் தேதி அறிவிக்கப்பட்டது.. மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் 3 தினங்களுக்கு முன்பும்கூட வீடியோ கான்பரஸ் மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.

நடவடிக்கைகள்
அப்போது, வைரஸ் தடுப்புப் பணிகளில், மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகள் எந்த மாதிரியான பலன்களை அளித்துள்ளன என்பது பற்றியும், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர்களிடம் பிரதமர் மோடி கருத்துக்களை கேட்டறிந்தார். இதை தவிர, ஊரடங்கை நீட்டிப்பதா, அல்லது படிப்படியாக தளர்த்துவதா என்பது குறித்தும் அன்றைய தினம் ஆலோசித்ததாக கூறப்பட்டது.

நீட்டிப்பு
அதனால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக விரைவிலேயே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 4 முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள நிலைமையை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2 வாரம்
ஏற்கனவே 2 முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மே 4ந்தேதி முதல் 3வது முறையாக ஊரடங்கு மேலும் 2 வாரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் சிவப்பு மண்டலப் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மண்டலங்களிலும் ரயில், விமான, மெட்ரோ, பஸ் போக்குவரத்து செயல்படாது. பள்ளி கல்லூரிகள் கல்வி நிறுவனங்கள் இயங்காது. பயிற்சி மையங்கள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது.

சில தடைகள்
சிவப்பு மண்டலப் பகுதிகளில் உள்ள கண்டெய்ன்மென்ட் ஸோன்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையுடன் மேலும் சில தடைகள் கூடுதலாக விதிக்கப்படுகின்றன. அதன்படி, சைக்கிள் ரிக்ஷாக்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓடுவது, டாக்சிகள், கேப் வாகனங்கள் இயக்குவது, மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து, சலூன் கடைகள், ஸ்பா, மற்றும் பார்பர்ஷாப்கள் செயல்படுவது தடை விதிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications