கொரோனா டிஸ்சார்ஜ் விதிகளை திடீரென மாற்றிய தமிழக அரசு.. இனிமேல் இதுதான் வழி.. சுகாதாரத்துறை அதிரடி!
தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றி புதிய வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றி புதிய வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.
Recommended Video
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. சென்னையில் இன்று மட்டும் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட 489 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதுவரை 4,895 பேர் குணமடைந்து உள்ளனர்.

மாற்றி உள்ளது
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்வதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றி புதிய வழிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் அறிகுறி இல்லாமல் அல்லது மிக குறைவான அறிகுறி கொண்ட கொரோனா நோயாளிகள் 10 நாட்கள் கழித்து டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். இவர்களுக்கு 10 நாட்கள் கழித்து தொடர்ச்சியாக மூன்று நாட்களாக காய்ச்சல் இல்லை என்றால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யபபடலாம்.

சிகிச்சை எங்கே
இவர்கள் கொரோனா டெஸ்டில் பாசிட்டிவ் என்று வந்ததில் இருந்து இந்த கணக்கு மேற்கொள்ளப்படும்.பொதுவாக அறிகுறி இல்லாத நபர்கள் தமிழகத்தில் வீட்டில் வைத்து சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் கொரோனா தடுப்பு மையத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்கள் சிகிச்சை பெற தொடங்கிய நாளில் இருந்து 10 நாட்கள் கழித்து, தொடர்ச்சியாக மூன்று நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

அவசியம் இல்லை
இதில் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த இரண்டு வகைகளில் குணமாகும் நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யும் முன் உறுதிப்படுத்த கொரோனா சோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இறுதியாக செய்யப்படும் கொரோனா சோதனை இல்லாமலே இவர்களை டிஸ்சார்ஜ் செய்ய முடியும். ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின் இவர்கள் 7 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். இதற்கு முன் நோயாளிகளை கடைசியாக இரண்டு முறை கொரோனா சோதனை செய்வார்கள்.

தனிமை உக்கிரம்
இரண்டு முறையும் நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ் செய்வார்கள். ஆனால் தற்போது அந்த சோதனை முறைகள் கைவிடப்பட்டு, சோதனை இல்லாமலே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்று அறிவிக்கப்பட்டள்ளது. அதேபோல் ஒரு கட்டுப்பாட்டு பகுதிகளில் 14 நாட்களாக தொடர்ச்சியாக புதிய கேஸ்கள் இல்லை என்றால் அந்த இடம் கட்டுப்பாட்டு பகுதி பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

கட்டுப்பாட்டு பகுதி எப்படி செயல்படும்
கிராமங்களில் அடுத்தடுத்த ஐந்து வீடுகளில் கொரோனா கேஸ்கள் ஏற்பட்டால் மொத்த கிராமமும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படலாம். ஆனால் கார்ப்பரேஷன் பகுதிகளில் ஒரு தெருவில் அடுத்தடுத்து கேஸ்கள் ஏற்பட்டால், அந்த தெரு மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்த கொரோனா அறிகுறி உள்ள எல்லோரும் சோதனை செய்யப்படுவார்கள். 14 நாட்களுக்கு முன் வந்த எல்லோரும் சோதனை செய்யப்படுவார்கள்.

காண்டாக்ட் சோதனை எப்படி
அறிகுறி இல்லாத, ஆனால் கொரோனா நோயாளிகளுடன் தொடர்ந்து கொண்ட பிரைமரி காண்டாக்ட்கள் சோதனை செய்யப்டுவார்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வரும் எல்லோரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். தமிழகத்திற்கு உள்ளேயே மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்யும் நபருக்கு அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை செய்யப்படும். இல்லையென்றால் சோதனை செய்யப்படாது, என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications