சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம்.. ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா.. தமிழகத்தில் 2526 பேர் பாதிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக தினமும் தமிழகத்தில் 100+ கேஸ்கள் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று சுகாதாரத்துறை செயலாளர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

அதில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

சென்னை நிலை

சென்னை நிலை

மேலும், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 176 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 1082 பேருக்கு இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கொரோனா காரணமாக ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த 98 வயது நபர் உயிரிழந்ததால் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 28ஆக உயர்ந்தது.

செங்கல்பட்டு நிலை

செங்கல்பட்டு நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

கரூர் நிலை

கரூர் நிலை

கரூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

அரியலூர் நிலை

அரியலூர் நிலை

அரியலூர் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 54 பேர் குணமாகி உள்ளனர். மொத்தமாக 1312 பேர் குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாட்டில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 54 சதவிதம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா சோதனையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மொத்த சோதனை

மொத்த சோதனை

இன்று மொத்தமாக 9687 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1.30 லட்சம் பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மட்டும் 3600 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.1% ஆக உள்ளது.குணமடைதல்- 52% ஆக உள்ளது.

English summary
Coronavirus: Today 203 cases recorded in Tamilnadu, So far 2526 cases in the start.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X