தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் பாதிப்பு அதிவேகம்.. என்ன காரணம்?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் மூன்றாவது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து சற்று ஆறுதல் அளிக்கிறது.

கொரோனா அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறப்புகள் எண்ணிக்கை
இதனால் மொத்த பாதிப்பு 26,32,231 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். கோவையில் 2 பேரும், காஞ்சிபுரத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். மயிலாடுதுறையில் 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 35,146 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,517 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,80,686 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் குறைவாக இருக்கிறது.

சென்னையில் குறைவு
16,399 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,58,117 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,31,66,828 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 170 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களகா பாதிப்பு சற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் கோவை தொடந்து முதலிடம் பிடித்துள்ளது. ஈரோட்டிலும் கொரோனா உச்சம் தொட்டுள்ளது.

தஞ்சாவூரில் அதிகம்
கோவையில் 218 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 114 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 30 பேருக்கும், மதுரையில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், திருச்சியில் 47 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 91 பேருக்கும், விருதுநகரில் 7 பேருக்கும், ஈரோட்டில் 151 பேருக்கும், சேலத்தில் 55 பேருக்கும், நாமக்கல்லில் 52 பேருக்கும், தஞ்சாவூரில் 117 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக தஞ்சாவூர், ஈரோடு, கோவையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று பல மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை என்பது மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கிறது. கொரோனா சற்று அதிகரித்துள்ளதால் தமிழக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனா மேலும் அதிகரிப்பதை தவிர்க்க முடியும்.












Click it and Unblock the Notifications