50 வயசுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி.. எப்போது துவக்கம்? ஹர்ஷ் வர்த்தன் அறிவிப்பு
சென்னை: கொரோனா தடுப்பூசி போடும் பணியின் மூன்றாவது கட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது, 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Recommended Video

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16ம் தேதி நமது நாட்டில் தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு ஊசி செலுத்தப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு இந்த வாரத்தில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், லோக்சபாவில் நேற்று கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன. ிந்த கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய, சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் பதில் அளித்து கூறியதாவது:
சுகாதார, முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. அதில், 50 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கும், இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும்.
இப்பிரிவினரில் மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இப்பணி தொடங்கும் தேதியை இப்போதே சொல்ல முடியவில்லை. மார்ச் மாதத்தில் பணி தொடங்கும். மார்ச் 2வது 3வது அல்லது 4வது வாரத்தில் தொடங்கும். தடுப்பூசி பணிக்கு பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுதவிர, 7 தடுப்பூசிகள் உருவாக்கும் பணி முன்னேறிய கட்டத்தில் இருக்கிறது. அவற்றில் 3 தடுப்பூசிகள், 3ம் கட்ட மருத்துவ பரிசோதனையிலும், 2 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும், மற்றவை பரிசோதனைக்கு முந்தைய கட்டத்திலும் உள்ளன. இவ்வாறு ஹர்ஷ் வர்த்தன் தெரிவித்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications