சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாலியல் குற்றங்கள்.. அமெரிக்காவே எச்சரிக்கிறது.. மோசமாகும் நிலைமை.. திமுக கூட்டணியான சிபிஎம் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு

கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் ''பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்" எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

காவல் ஆய்வாளரின் கொடூர செயல்

காவல் ஆய்வாளரின் கொடூர செயல்

தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவைப் பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தகாத முறையில் பேசியதோடு, புகார் அளிக்க வந்த மாணவியின் உறவினரை ''என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற'' எனச் சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார்.

காவல் நிலையத்திலேயே....

காவல் நிலையத்திலேயே....

மேலும், அவரை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். ''ஏன் அவரை அடிக்கிறீர்கள்'' எனக் கேட்ட உறவினர்கள் சிலரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும், அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார். காவல்துறையின் இத்தகைய தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இழப்பீடு வழங்க வேண்டும்

இழப்பீடு வழங்க வேண்டும்

மிருகத்தனமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை உடனடியாகக் கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

இரண்டு மாணவிகள் தற்கொலை

இரண்டு மாணவிகள் தற்கொலை

இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்கள் செல்ல வேண்டாம், பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது'' என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதை அறியலாம். கடந்த ஒரு வாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தடுத்து நிறுத்த வேண்டும்

தடுத்து நிறுத்த வேண்டும்

மேலும் சில மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

விசாகா கமிட்டி

விசாகா கமிட்டி

கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக் கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டுமெனவும், அதைப் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டுமெனவும், பாலியல் தொந்தரவு இருந்தால் மேற்கண்ட கமிட்டிக்கு புகார் கொடுக்கலாம் என்பதையும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குத் தகவல் அளித்திட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.பாலியல் புகார் தரப்பட்டால் அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

English summary
The Marxist Communist Party (CPM) has demanded that the Tamil Nadu government take action to ensure the safety of students in educational institutions
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X