தமிழகத்துக்கு பிரதமர் கேர் நிதி, பேரிடர் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கொடுத்தீர்களா? பாலபாரதி பொளேர்
சென்னை: கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருக்கும் தமிழகத்துக்கு பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒரு ரூபாயாவது கொடுக்கப்பட்டதா? என மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியில் பாலபாரதி பேசியதாவது:

பீகாருக்கு 2 மருத்துவமனைகள்
கொரோனா நோய் தொற்று காலத்தில் பிரதமர் கேர் நிதிக்கு பல்வேறு வகைகளில் நிதி வந்துள்ளது. கொரோனா பாதிப்பில் 14-வது இடத்தில் பீகார் மாநிலத்துக்கு இந்த நிதியில் இருந்து 2 கொரோனா சிறப்பு மருத்துவமனைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. இன்னொரு மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்திருக்கிறது.

ஒரு ரூபாய்கூட இல்லையே
பிரதமர் கேர் நிதியை பீகாரும் பயன்படுத்த வேண்டும் என்பதில் தவறு இல்லை. அவர்களும் இந்திய மக்கள்தான். அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருக்கிறது தமிழகம். இந்த மாநிலத்தில் 5000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அப்படிப்பட்ட இந்த மாநிலத்துக்கு பிரதமர் கேர் நிதியில் இருந்து ஒரு ரூபாயாவது கொடுத்திருப்பீர்களா?

தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு
பீகாரில் சட்டசபை தேர்தல் வருவதால் பிரதமர் கேர் நிதியை அந்த மாநிலத்தித்துக்கு ஒதுக்கியுள்ளனர். தமிழகத்துக்கு ஒரு ரூபாயாவது கொடுத்துவிட்டு தமிழகத்தில் வளர்ச்சி இல்லை; எதிர்க்கட்சிகள் தடுக்கிறார்கள் என்று சொன்னால் பரவாயில்லை. ஏற்கனவே ஜிஎஸ்டி காலாண்டு நிலுவைத் தொகை மாநிலங்களுக்கு வழங்கமாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

பேரிடர் நிதி, ஜிஎஸ்டி பணம்
கொரோனா தொற்றை பேரிடர் காலத்தில் இணைத்துவிட்டீர்கள். சரி... அந்த பேரிடர் கால நிதியில் இருந்து ஒரு ரூபாயையாவது இந்த தமிழக மாநில மக்களுக்கு கொடுத்திருப்பீர்களா? மத்திய அரசு ஒரு ஆயிரம் ரூபாயாவது கொடுத்ததா?. இவ்வாறு பாலபாரதி கேள்வி எழுப்பினார்.
-
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications