ஓராண்டாக உள்நோக்கத்தோடு விமர்சனம்.. அண்ணாமலையை தாக்கி அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
சென்னை: தேசிய ஜனநாயக கூட்டத்தில் பாஜக மாநில தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டு அதிமுக காவல் தெய்வங்களை அவதூறாக பேசியும் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது என்று அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா தொடராதா என்ற உச்ச கட்ட பரபரப்பு நிலவிய நிலையில் இன்று கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி செய்தியாளர்கள் முன் வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை வாசிக்கிறேன். அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் எம்.எல்.ஏக்கள், எம்.பிகக்ள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டத்தில் பாஜக மாநில தலைமை கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டு அதிமுக மீது கழக தெய்வங்கள் அண்ணா, ஜெயலலிதா அவர்களை அவதூறாக பேசியும் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறது.
மதுரையில் நடைபெற்ற பொன்விழா மாநாட்டை சிறுமைப்படுத்தியும் எடப்பாடியை அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்த செயல் தொண்டர்கள் மத்தியில் கொந்தளிபான சூழல் ஏற்படுத்தியுள்ளது. இன்று மாலை மாவட்ட செயலளர்கள்,கட்சி நிர்வாகிகள் கோடி தொண்டர்கள் எண்ணத்திற்கும் விருப்பம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்கிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலை அதிமுக தலைமையில் மற்ற கூட்டணியோடு இணைந்து சந்திக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை குறித்து விமர்சனம் செய்ததை அதிமுக கண்டித்து கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், இன்று அகக்ட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவரை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications