Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெடிக்கல்லில் அலறல் சத்தம்.. துடிதுடித்து போன இளம்பெண்.. அப்படியே ஜம்ப் பண்ணி ஓடிய போலி மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல மெடிக்கல்லில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள கச்சிமைலூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் (வயது 50) இவர் ராமநத்தத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து ஓம்சக்தி என்ற பெயரில் மெடிக்கல் நடத்தி வருகின்றார். இவர் மருத்துவம் படிக்கவில்லை என்றாலும் தன்னையே மருத்துவர் என்று பொய்யாக அழைத்து வருகிறார்.

மருத்துவம் பார்ப்பார்

மருத்துவம் பார்ப்பார்

இவர் தலைவலி, காய்ச்சல் என்று வருபவர்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் கருக்கலைப்பு சிகிச்சையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுக்கா மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் அவரது மனைவி அனிதா (வயது 27) இவரிடம் சிகிச்சை பெற வந்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

இந்த நிலையில் மூன்றாவதாக அனிதா கர்பம் அடைந்து உள்ளார் .இதனால் அனிதாவின் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்ய நினைத்து ராமநத்தத்தில் உள்ள முருகனின் மெடிக்கலுக்கு கரு கலைப்பு செய்வதற்கு வந்துள்ளனர்.முருகன் மெடிக்கல் பக்கத்தில் இதற்கு என்று தனியாக வைத்துள்ள அறைக்கு அனிதாவை அழைத்து சென்று கருகலைப்பு சிகிச்சை அளித்துள்ளார். இதில் அனிதா மயக்கம் அடைந்துள்ளார்.

அலறல்

அலறல்

செய்ய தெரியாமல் கருக்கலைப்பு செய்ததில் அனிதா அலறி துடித்து கத்தி இருக்கிறார். அதன்பின் அனிதாவிற்க்கு மாலை வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. மேலும் இரத்த போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அந்த பெண் வலியில் துடித்து இருக்கிறார். இதனை அடுத்து முருகன் அனிதாவையும் அவரது கணவரையும் தனது காரில் ஏற்றிக் கொண்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.

முருகன் தலைமறைவு

முருகன் தலைமறைவு

மருத்துவமனையின் உள்ளே அனிதா மற்றும் அவரது கணவர் இருவரையும் அனுப்பி வைத்து விட்டு முருகன் அங்கிருந்து, சுவர் எகிறி குதித்து தனது காரில் தப்பிச் சென்றுள்ளார். அனிதாவை அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அனிதா உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து அங்கு வந்த ராமநத்தம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான போலி மருத்துவர் முருகனை தேடி வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+