வேதா நிலையம் மீதான உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அதிமுகவின் நிலைப்பாடு என்ன?.. ஜெயக்குமார் விளக்கம்
சென்னை: வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமாக எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்றது.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு முக்கிய விவரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் நடைபெறும் தேர்தல்
அதேப்போல், நகர்ப் புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், மாபெரும் வெற்றி பெறுவது குறித்து அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஜனநாயக விரோத அரசு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும், திமுக ஜனநாயக விரோத அரசு என்றும், மாநில தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு செயல்பட்டு வருவதாகவும், அதனை முறியடித்து அதிமுக வெற்றி பெற வேண்டும் என கருத்துக்கள் பகிரப்பட்டதாக கூறினார்.

உயர்நீதிமன்ற உத்தரவு
மேலும், வேதா நிலையம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பதிலளித்த அவர், அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களின் திருக்கோவிலாக நினைக்கும் இடம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேல் நடவடிக்கை தொடர்பாக கட்சி ஆலோசித்து முடிவு செய்யும் எனவும் கூறினார்.

உண்மையான தொண்டர்கள்
தொடர்ந்து பேசிய அவர், அதிமுக மாபெரும் எஃகு கோட்டை எனவும், உண்மையான தொண்டர்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள் என குறிப்பிட்ட அவர், வியாபாரிகள் தான் எந்த குளத்தில் தண்ணீர் உள்ளதோ, அந்த குளத்தை நோக்கி செல்வார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.

கட்சிக்குள் கருத்து பரிமாற்றம்
அன்வர் ராஜா குறித்த கேள்விக்கு கட்சிக்குள் கருத்து பரிமாற்றம் இருக்கும். அதற்கு வருத்தம் தெரிவிப்பது இயல்பு தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டார். இந்த கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பது குறித்து யோசிக்க வேண்டும் என அன்வர்ராஜா கூறியதாகவும் சொல்லப்படுகிறது. அது போல் சசிகலா குறித்து பேசியதற்கு அன்வர்ராஜாவிடம் சிவி சண்முகம் கோபப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல்












Click it and Unblock the Notifications