நேர்மையா நடக்குறது பிடிக்கலயா..? ‘திமுகவுக்கு ஜால்ரா’.. ஆளுநருக்கு சப்போர்ட்டாக இறங்கிய தேவநாதன்!
சென்னை : திமுகவின் எண்ணத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் தமிழக ஆளுநரை, திமுக தனது கூட்டணி கட்சிகளை ஏவி வசைபாட வைக்கிறது என தேவநாதன் யாதவ் விமர்சித்துள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதனம், இந்து மதம் பற்றி பேசி வரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதைத் தொடர்ந்து, ஆளுநர் பதவி விலக வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கூட்டறிக்கை விடுத்தன.
தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையாக எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் ஆளுநரின் செயல்பாடுகளை வரவேற்றுள்ளார். தேவநாதனின் கட்சி கடந்த 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 24 தொகுதிகளில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆட்சி அமைந்த பிறகு ஆளுநர்கள் நேர்மையான முறையில் நடந்து கொள்கின்றனர், தமிழக ஆளுநர் தனது பணியை சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்து கொண்டிருக்கிறார் என தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆளுநருக்கு திமுக கூட்டணி எதிர்ப்பு
ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திமுக கூட்டணி கட்சிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகவே பேசத் துணிந்து விட்டார் ஆளுநர். எந்த ஒரு நாடும் ஏதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கு அல்ல என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மதச்சார்பற்ற நாடு இது என்கிறது அரசியலமைப்புச் சட்டம். ஒரு மதத்துக்கு வக்காலத்து வாங்குபவராக ஆளுநர் தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதுவே அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. இதை விட பெரிய பதவி எதையாவது எதிர்பார்த்து பாஜ தலைமையை மகிழ்விக்க ஆர்.என்.ரவி இப்படிப் பேசுவதாக இருந்தால், அவர் தனது ஆளுநர் பதவியை விட்டு விலகி விட்டு, இதுபோன்ற கருத்துகளைச் சொல்லட்டும். மாறாக, அப்பொறுப்பில் இருந்துகொண்டு பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூட்டறிக்கை விடுத்தனர்.

ஆளுநர்கள் இப்போதுதான் நேர்மையாக நடக்கின்றனர்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவர் தேவநாதன் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காங்கிரஸ் கட்சி நாட்டை ஆளும் போது ஆளுநர்கள் ஆளுங்கட்சிக்கு சாமரம் வீசியும் தலையாட்டி பொம்மையாகவும் ஆட்டுவிக்கப்பட்டார்கள். பல மாநிலங்களில் ஆளுநர் மாளிகைப் பணி செய்தார்களே தவிர மக்கள் பணியை செய்ததில்லை. ஆனால் தற்போது மக்கள் விரும்பிய பாஜகவின் ஜனநாயக ஆட்சி அமைந்த பிறகு நியமிக்கப்பட்ட ஆளுநர்கள், ஆளும்கட்சி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும் கண்டித்தும் நேர்மையான முறையில் நடந்து கொள்கின்றனர்.

திமுக கூட்டணியே தமிழகத்திற்கு ஆபத்து
இது பல கட்சிகளின் கண்ணை உறுத்துகிறது. தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்ட பின் ஆளும் திமுக அரசின் பொய் தோற்றத்தை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டி வருகிறார். குறிப்பாக நமது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் தொன்மையையும் மீட்டு வருகிறார். ஆளுநரின் கருத்துகள் அனைத்தும் ஆபத்தானவை அபத்தமானவை என திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநரை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. உண்மையிலேயே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தான் தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்தானவை அபத்தமானவை.

திமுக எண்ணம் நிறைவேறாது
ஆளுநரின் கருத்துகளை ஏற்பதும் ஏற்க மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆளுநர் என்பவர் ஆளுகின்ற கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதியல்ல. ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டே செயல்படுகிறார். திமுக கொள்கைகளை ஏற்காமல் நேர்மையாக செயல்படுகிறார் என்பதற்காக ஆளுநர் பதவியில் இருப்பவரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடுவது கண்டனத்திற்குரியது. தமிழின் வரலாறும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஆன்மீகத்தின் துவக்கம் இல்லாமல் தமிழின் வரலாறு தொடங்க முடியாது. தமிழின் துவக்கம் இல்லாமல் ஆன்மீகத்தை வரையறுக்க முடியாது. தமிழை வளர்க்க வேண்டினால் ஆன்மீகத்தையும் பரப்ப வேண்டும். அப்போது தான் தமிழ் வாழும் வளரும். ஆனால் இதை விடுத்து ஆன்மீகத்தை அழித்து தமிழை தனித்து, அழித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது.

கூட்டணி கட்சிகளை ஏவி
திமுகவின் எண்ணத்தை நிறைவேற்ற தடையாக இருக்கும் ஆளுநரை திமுக தனது கூட்டணி கட்சிகளை ஏவி ஆளுநர் குறித்து வசைபாட வைக்கிறது என்பது மக்களுக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது. தமிழரல்லாதோர் தமிழகத்தை ஆட்சி செய்ய பிற மொழியாளர்கள் இணைந்து கட்டமைத்ததே திராவிட பிம்பம். அதை மக்கள் உணரும் காலம் வந்துவிட்டது. குறிப்பாக ஒருமதத்தை புறக்கணித்து பிற மதங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார் தமிழக முதலமைச்சர். திமுக தலைவராக அவர் தனது சுய விருப்பு வெறுப்பு அடிப்படையில் தனக்கு பிடித்த மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லுவது அவர் உரிமை.

முதல்வர் ராஜினாமா செய்யவேண்டும்
ஆனால் அரசியலமைப்பு சட்டப்படி சுய விருப்பு வெறுப்புகளை கடந்து மதச்சார்பற்று செயல்படுவேன் என முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட ஸ்டாலின், இந்துமத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தியும் வசைபாடியும் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறாமலும் அரசியலமைப்பு சட்டத்தை மீறி வருகிறார். உள்ளபடியே ராஜினாமா செய்ய வேண்டியது முதலமைச்சர் தானே தவிர ஆளுநர் அல்ல.

காவடி தூக்கி
ஆளுநர் தனது பணியை சிறப்பாகவும் நேர்மையாகவும் செய்து கொண்டிருக்கிறார், இனிமேலும் செய்வார். பதவிகளுக்காகவும் சுகபோக வாழ்க்கைக்காகவும் திமுகவிற்கு மட்டுமின்றி அதன் தலைவரின் வம்சாவளியினருக்கே காவடி தூக்கி சாமரம் வீசிக்கொண்டிருப்பவர்களுக்கு ஆளுநர் குறித்து பேச எந்த தகுதியும் இல்லை. இரண்டு சீட்டுகளை மூன்றாக உயர்த்த திமுகவிற்கு ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

நிரந்தர நண்பர்கள் இல்லை
மதச்சார்பற்ற கூட்டணி என கூறிக்கொண்டு இந்து மதத்தை புண்படுத்தி மற்ற மதங்களை வளர்த்து வரும் சந்தர்ப்பவாதிகளே.. நீங்கள் எந்த பதவிக்கு அலைந்து இப்படி செய்கிறீர்கள் என்பதையும் விளக்க வேண்டும் . நீங்கள் திமுகவின் நிரந்தர நண்பர்கள் இல்லை. நாளை காலங்கள் மாறலாம் கூட்டணிகளும் மாறலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்











Click it and Unblock the Notifications