ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு.. தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி! ஜவாஹிருல்லா வேதனை!
சென்னை: ஹிஜாப் வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ள நிலையில் தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதி என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முஸ்லிம் மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பேரிடராக உள்ளது எனக் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக் அவர் விடுத்துள்ள அறிக்கையின் விவரம் வருமாறு;

ஹிஜாப் வழக்கு
''ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் இன்று இரு நீதிபதிகள் கொண்ட உச்சநீதீமன்ற அமர்வு முரண்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது. இரு நீதிபதிகளில் ஒருவரான நீதியரசர் சுதான்சு துலியா ஹிஜாபிற்கு தடைவிதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்பு நியாயமானதாக உள்ளது. பீஜோ இமோனுவல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நீதியரசர் தூலியா ஹிஜாப் அணிவதை தடை செய்வதற்கு முகாந்திரம் இல்லை என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.''

பெண் குழந்தைகள்
''பெண் குழந்தைகள் கல்வி கற்பதின் அவசியத்தை தனது தீர்ப்பில் முன்னிலைப்படுத்தியுள்ள நீதியரசர் தூலீயா பெண் கல்விக்கு அரசோ சமுதாயமோ எவ்வித முட்டுக்கட்டையும் போடக் கூடாது என்று அறிவார்ந்த நிலைப்பாட்டை எடுத்து ஹிஜாப் மீதான் தடையை நீக்கியுள்ளார்.
ஆனால் நீதியரசர் ஹேமந்த் குப்தா இதற்கு நேர்மாற்றமான நிலைப்பாட்டை எடுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடை சரியென தீர்ப்பு வழங்கியுள்ளார்.''

பேரிடரான தீர்ப்பு
''இதன் விளைவாக இந்த வழக்கு மற்றொரு விரிவான அமர்விற்கு முன்பு விசாரணைக்கு அனுப்புவதற்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிபதி தூலியா அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது போல் ஹிஜாபிற்கு தடைவிதிப்பது பெண் கல்விக்கு போடப்படும் முட்டுக்கட்டை தான். இதனை நீக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்படும் எதிர்ப்பார்ப்பில் இருந்த கர்நாடக முஸ்லிம் மாணவியர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பேரிடராகும்.''

தாமதிக்கப்படும் நீதி
''தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி என்ற முதுமொழிக்கேற்ப இன்றைய தீர்ப்பு அமைந்துள்ளது. இந்த வழக்கு மீண்டும் விரிவான அமர்வில் விசாரிக்கப்பட்டு விரைந்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் கேட்டு கொள்கிறேன்.'' இவ்வாறு ஜவாஹிருல்லா தனது பதிவில் கூறியிருக்கிறார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications