சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள்.. ஓரிரு நாட்களில் தொகுதி உடன்பாடு முடியும்.. சண்முகம் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்துவிட்டு பதில் அளிப்பதாக திமுக தலைமை கூறியதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக - சிபிஎம் இடையிலான 3ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. திமுக தரப்பில் அமைக்கப்பட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவும், சிபிஎம் சார்பாக அமைக்கப்பட்டக் குழுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சுமார் ஒரு மணி நேரம் வரை ஆலோசிக்கப்பட்டது.

DMK Alliance

கடந்த தேர்தலில் சிபிஎம் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் கூடுதலாக சில கட்சிகள் இணைந்திருப்பதால், கூட்டணி கட்சிகளும் தொகுதிகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்து வருகிறது. கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க முடியாது என்றும் மறைமுகமாக பேசி வருகிறது.

இந்த நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு பின் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திமுகவுடன் 3வது கட்டமாக சிபிஎம் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த தேர்தலை விடவும் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். நிறைய கட்சிகள் கூட்டணியில் இருப்பதால், பேச்சுவார்த்தை முடிப்பதில் சிரமம் உள்ளது.

ஏனென்றால் ஒவ்வொரு கட்சிகளுடனும் தனித்தனியாக பேசி முடிக்க வேண்டி இருக்கிறது. எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் பேசி இரவு கூறுவதாக சொல்லி இருக்கின்றனர். ஆகவே, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். சுமூகமாக தொகுதி பங்கீடு செய்வதற்கான முயற்சிகள் இரு தரப்பிலும் இருக்கிறது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் இது முடிவடையும் என்று நம்புகிறோம்.

தேர்தலுக்கு இது போதுமான அவகாசம் இருக்கிறது. அடுத்த ஓரிரு நாட்களில் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு முடிவடையும் என்று கருதுகிறோம். புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளதால், குறைவான தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் எங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறோம். இப்படியான சூழலை தவிர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளோம்.

காங்கிரஸ் கட்சியுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஒவ்வொரு கட்சியும் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அவரவர் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை பெறுகிறார்கள். சிபிஎம் அதன் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை பெற முயற்சிக்கிறோம். இது Dead Lock என்ற பேச்சிற்கே இடமில்லை. மீண்டும் இன்று இரவே கூட பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+