"கனிமொழிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி?" டிகேஎஸ் இளங்கோவன் சொன்ன வார்த்தை!
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு புதிய வழங்கப்பட உள்ளது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தகவல் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் திரைக்கு வந்தது முதல், ராஜராஜ சோழன் பற்றிய விவாதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ராஜராஜ சோழனை இந்து அரசனாக்கிவிட்டனர் என்று இயக்குநர் வெற்றிமாறன் குற்றம் சாட்டி இருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியது.
பாஜக உள்ளிட்ட கட்சியினர் இயக்குநர் வெற்றி மாறனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மறுமுனையில் விசிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சியினர் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெற்றி மாறனுக்கு ஆதரவு
குறிப்பாக நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற ஒரு மதமே இல்லை. சைவமும் வைணவமும் மட்டும்தான் இருந்தது என்று தெரிவித்தார். அதேபோல் சீமான் கூறுகையில், ராஜராஜ சோழன் சைவ சமயத்தைச் சேர்ந்தவன் என்றும், ராஜராஜ சோழன் காலத்தில் இந்தியா என்ற நாடே கிடையாது என்று தெரிவித்தார்.

டிகேஎஸ் இளங்கோவன்
இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக பொதுக்குழு என்பது ஐந்து ஆண்டுகள் ஒரு முறை நடைபெறுவது வழக்கம், தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை தேர்ந்தெடுப்பதற்காக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.

ராஜராஜ சோழன் விவகாரம்
தொடர்ந்து ராஜராஜ சோழன் விவகாரம் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ராஜராஜ சோழன் மன்னனாக இருந்த போது இந்து மதம் என்ற ஒரு மதம் இருந்ததாக வரலாறு இல்லை. சைவம் மற்றும் வைணவம் தான் இருந்தது. அதனால்தான் தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று கூறுவார்கள். சைவ - வைணவ போராட்டம் என்பது காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ராஜராஜ சோழன் சைவ மன்னன்தான் என்று தெரிவித்தார்.

கனிமொழிக்கு புதிய பதவி
தொடர்ந்து திமுகவின் மகளிரணி செயலாளராக பொறுப்பு வகிக்கும் கனிமொழிக்கு புதிய பதவி வழங்கப்பட இருப்பதாக வெளியான தகவல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, கனிமொழிக்கு பதவி தருவது குறித்து தலைவர் தான் முடிவு செய்வார் என்று தெரிவித்தார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்தும், அரசியலில் இருந்தும் விலகியுள்ளார்.
இதனால் திமுகவின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவர் விலகியுள்ள நிலையில், மகளிர் ஒருவர் துணைப் பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்ற திமுகவின் சட்ட விதியின் காரணமாக அந்த பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.
-
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னையில் 20 லட்சம் கொடுத்து ஆசை ஆசையாக லீசுக்கு குடியேறிய வீடு.. இப்படியும் ஏமாறலாம் மக்களே -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம்












Click it and Unblock the Notifications