சென்னை-சேலம் 8 வழிச் சாலை சரியானது.. லேட்டா உணர்ந்த திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்கனும்- அண்ணாமலை
சென்னை: எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சமீபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எட்டு வழிச்சாலை குறித்து கருத்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அண்ணாமலையின் அறிக்கை கவனிக்கதக்கதாக மாறியுள்ளது.
சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டதை திமுக எதிர்க்கவில்லையென்றும், ஆனால் விவசாயிகளிடமும் இதனால் பாதிக்கப்படும் மக்களிடமும் கலந்து பேசி இந்த திட்டத்தை அமல்படுத்தலாம் என்றுதான் கட்சி கூறியிருந்ததாகவும் அமைச்சர் வேலு சமீபத்தில் பேசியிருந்தார்.

அண்ணாமலை அறிக்கை
இந்நிலையில், சேலம் சென்னை 8 வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "எட்டு வழிச்சாலை திட்டம் சரியான திட்டம் என்று இப்போது திமுக அரசு உணர்ந்துள்ளது. எனவே இதற்காக எதிர்க்கட்சியாக இருந்த போது மக்களிடம் அவிழ்த்துவிட்ட பொய்களுக்கு மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பரந்தூர் விமான நிலையம்
மேலும் பரந்தூர் விமானநிலையம் தொடர்பாக, "திமுக ஆட்சியில் கடந்த ஓராண்டாக நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் மாற்று குடியிருப்புகள் கொடுப்பதற்கு முன்பு வீடுகள் இடிக்கப்பட்டதை பரந்தூர் வாசிகள் பார்த்திருப்பார்கள். அதனால்தான் இன்று திமு அரசு நிழலத்தை வழங்குகிறோம் இழப்பீடு கொடுக்கப்படும் என கூறும் வாக்குறுதிகள் எவற்றையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. தேர்தல் வாக்குறுதிகளையே நிறைவேற்றாத திமுக அரசு, பரந்தூர் மக்களுக்கு தரும் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவார்கள்? என்பதை அந்த மக்கள் எப்படி நம்புவார்கள்?

எண்ணை கிணறுக்காக கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
பரந்தூர் மக்களுக்கு தேவையான இழப்பீட்டுத் தொகை, மாற்று குடியிருப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும்" என்றும், 2006ல் தந்த 2 ஏக்கர் நிலம் இலவசம் என்ற வாக்குறுதியை பரந்தூர் மக்களுக்காவது நிறைவேற்றித்தர வேண்டும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். மேலும், "இனியும் அரசியல் லாபத்துக்காக மக்களை திசைதிருப்பாமல் தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும். திருவாரூரில் ONGC-இன் எண்ணெய்க் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதை முதலமைச்சரின் கனிவான கவனத்துக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என்றும் தனது அறிக்கையில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வேலு கருத்து
சமீபத்தில் பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பாக பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "8 வழிச்சாலை போடக்கூடாது என திமுக சொல்லவே இல்லை, திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் 8 வழிச் சாலை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் "திமுக சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்" என்றுதான் சொன்னார். சட்டமன்றக் குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறேன். 8 வழிச்சாலை போடக்கூடாது என்று எந்த காலத்திலும் திமுக சொல்லவே இல்லை" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications