ஸ்டாலின் குறித்து அவதூறு.. மாஃபா பாண்டியராஜனுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. உருவ பொம்மை எரிப்பு!
திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதற்கு எதிராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடந்து வருகிறது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பியதற்கு எதிராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவில் மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பெயரில் பலர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் திமுக தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கைதானார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார்.
மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை. மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை மிசாவிற்காக அடிக்கவில்லை. அவர் மோசமான வழக்கில் சிறைக்கு சென்று இருந்தார். அதனால் அடித்தார்கள்.

ஸ்டாலின் இல்லை
அவருக்கும் மிசாவிற்கும் தொடர்பு கிடையாது. அவர் மிசாவில் சென்றதாக மக்களை ஏமாற்றுகிறார். அவர் பாலியல் வழக்கில்தான் சிறை சென்றார். அதை மக்களுக்கு தெரியாமல் மறைகிறார், என்று மாஃபா பாண்டியராஜன் குறிப்பிட்டு இருந்தார்.

பெரிய சர்ச்சை
மாஃபா பாண்டியராஜன் அளித்த இந்த பேட்டி திமுகவினர் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்டாலினின் அரசியல் பணிகளை, தியாகத்தை மாஃபா பாண்டியராஜன் கொச்சைப்படுத்திவிட்டார். அவருக்கு மக்கள் கடுமையான பாடம் புகட்டுவார்கள் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நாளை போராட்டம்
இந்த நிலையில் நாளை சென்னையில் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். சென்னை மற்றும் திருவள்ளுவர் மாவட்ட திமுகவினர் நாளை சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். அதேபோல் ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிராகவும் போராட்டம் செய்ய இருக்கிறார்கள்.

சென்னையில் இன்று
இன்றும் சென்னையில் பல இடங்களில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டம் செய்தனர். அவரின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதானது குறித்த மாஃபா பாண்டியராஜன் விமர்சனம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications