வருமான வரி செலுத்திட்டீங்களா.. உங்க வீட்டில் பணம் + தங்க நகை வைத்திருக்கிறீர்களா? அப்ப இதை படிங்க
சென்னை: உங்கள் வீட்டிற்குள் பணம், தங்கநகைகள் வைத்திருக்கிறீர்களா? இதுகுறித்து வருமானவரித்துறை முக்கிய அலர்ட் ஒன்றை தந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில், தமிழ்நாடுதான் முன்னிலையில் உள்ளது என்கிறார்கள்.. இதற்கு காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருப்பதுதான்..

உயர்வு: அதற்கேற்றபடி தங்கத்தின் மதிப்பும், விலையும் குறையாமலேயே இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை பெரும்பாலான நேரங்களில் உயர்ந்தும், சில சமயங்களில் மட்டும் குறைந்தும் வருகிறது.
எனினும் தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்கி விடுகிறார்கள்.. சிலர் வீடுகளில் தங்கம் மற்றும் பணத்தை வைத்திருப்பார்கள்.. வீட்டில் தங்கம் இருந்தால் செழிப்பாக இருக்கும் என்று இந்திய மக்கள் பலரும் நம்பிக்கை உள்ளது.. அனைத்து வங்கிகளிலுமே லாக்கர் வசதி இருந்தாலும்கூட, வீட்டில் நகை வைத்திருப்பதை பலர் விரும்புவார்கள்.
விதிகள்: ஆனால், இதற்கு சில விதிமுறைகள் உள்ளன.. எவ்வளவு தங்கத்தை நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதற்கான அரசாங்க விதிகள் உள்ளது.. வரித்துறையும் இதுகுறித்து பலமுறை தெளிவுபடுத்தி உள்ளது. 1994ம் ஆண்டில், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தங்கம் தொடர்பாக சில வழிமுறைகளை வெளியிட்டது.
பொதுவாக, தங்கம் நாம் வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லைதான்.. ஆனால், தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்களையும், ஆவணங்களையும் நாம் வைத்திருக்க வேண்டும்... அதுவும், ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகையை அவர் வைத்திருக்கலாம்.
பணமதிப்பு: திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என 2 தரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களையும் எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் வைத்திருக்கலாம்.
மேற்கூறிய அளவு வைத்திருப்பவரின் தங்கத்தை வருமான வரித்துறையினர் சோதனையிடும்போது பறிமுதல் செய்ய முடியாது... ஒருவேளை தங்கம் வைத்திருப்பதற்கு சரியான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வைத்திருக்கும் பட்சத்தில் தங்கம் வைத்திருப்பதற்கு வரம்பு எதுவும் கிடையாது.. ஆனால், வருமான வரித்துறையின் சோதனையின் போது வரி செலுத்துவோரின் நகைகளை பறிமுதல் செய்வதிலிருந்து விடுவிப்பதற்காக மட்டுமே இந்த விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அபராதம்: தங்கத்தைப் போலவே பணத்திற்கும் வரைமுறை உள்ளது.. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடும்போது, கையிலுள்ள பணம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என ஆதாரங்கள், ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். முறையான ஆவணங்களை காட்டிவிட்டால், பிரச்சனையில்லை.. ஆதாரத்தை காட்ட தவறினால், எவ்வளவு பெரிய தொகையானாலும் பறிமுதல் செய்யப்பட்டுவிடும்.. அத்துடன் 137 சதவீதம் வரை அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
நீங்கள் தங்கத்தை பரிசாகவோ அல்லது பரம்பரையாகவோ பெற்றிருந்தால், அதற்கான ஆவணத்தை நீங்கள் காட்ட வேண்டும். வருமான வரிக்கணக்கிலும் இதை கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு ஆவணமாக, தங்கத்தைப் பரிசளித்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ரசீதையும் காட்டலாம்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications