Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பானிபூரி சாப்பிட்ட நரிக்குறவர் பெண்.. திடீர்னு ஒரே எத்து.. மண்டை பிளந்து.. சென்னை போரூரில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில், நரிக்குறவ சமூக பெண் ஒருவரை, கொடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பாக நடவடிக்கையை உடனடியாக போலீசார் எடுக்க வேண்டும் என்றும் அச்சமூக மக்கள் கொந்தளிப்புடன் கூறி வருகிறார்கள்.. என்ன நடந்தது?

சென்னை போரூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. போரூர் அடுத்துள்ளது மாதா நகர் மெயின் ரோடு பகுதி.. இந்த பகுதியை சுற்றிலும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.. நேற்றிரவு 8 மணி அளவில், இந்த இனத்தை சேர்ந்த பெண்கள் சிலர், அங்கிருந்த ஒரு வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டு, பானிபூரி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

chennai narikuravar woman porur

பானிபூரி: அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு பைக்கில் வந்துள்ளார்.. 50 வயது மதிக்கத்தக்க இந்த வீட்டு ஓனர், தன்னுடைய வீட்டுவாசலில் உட்கார்ந்திருந்த பெண்களை பார்த்ததுமே, கோபப்பட்டுள்ளார்.. இதனால், தகாத வார்த்தைகளால் அந்த பெண்களை திட்டி, மோசமாக பேசியிருக்கிறார்.. அத்துடன், தன்னுடைய பைக்கிலிருந்த அரிசி மூட்டையை தூக்கி வந்து, ராதா என்ற நரிக்குறவ பெண்ணின் மீது போட்டுள்ளார்...

பிறகு தன்னுடைய வீட்டிற்குள் சென்று, பெரிய விறகு கட்டையை கொண்டுவந்து, அந்த பெண்ணின் தலையிலேயே கொடூரமாக தாக்கியிருக்கிறார்.. இதில் ராதா, அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்து விழுந்தார்... இதைப்பார்த்து பதறிப்போன மற்ற பெண்கள், அவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு பூவிருந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்..

தாக்குதல்: அங்கு ராதாவுக்கு தலையில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளது... பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீசிலும் புகார் தரப்பட்டது.. இந்த புகாரின் பேரில் மாங்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

தன்னுடைய வீட்டு வாசலில் நரிக்குறவர் இன பெண்கள் உட்கார்ந்திருந்ததால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவம்தான் இணையத்தில் சிசிடிவி காட்சியாக வெளிவந்து சென்னைவாசிகளை பதற வைத்துள்ளது.

இரவு நேரம் என்பதால், சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.. இந்த பிஸியான ரோட்டில், பெண்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், இதில் மண்டை உடைந்து தரையில் ரத்த வெள்ளத்தில் அந்த பெண் விழுவதும், இந்த சம்பவத்தை சுற்றிலும் ஏராளமானோர் திரண்டு நின்று வேடிக்கை பார்ப்பதும், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது..

அந்த வீட்டு ஹவுஸ் ஓனர், அரிசி மூட்டையை பெண்ணின் மீது போட்டு கட்டையால் கொலைவெறி தாக்குதல் நடத்திய இந்த சிசிடிவிக்காட்சி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோரிக்கை: இதைப்பார்த்து பதறிய பொதுமக்கள், நரிக்குறவ பெண் என்பதால் அவரை மனிதாபிமானமின்றி, வீட்டு வாசலில் கொலைவெறியுடன் தாக்குதல் நடத்தியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்...

கடந்த ஆகஸ்ட் மாதமும், இப்படித்தான் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில், நரிக்குறவர் மக்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.

இங்குள்ள ஜெயா நகர் நரிக்குறவர் காலணியில், நீதிமன்ற உத்தரவுடன் சுற்றுச்சுவர் எழுப்ப முயன்ற போலீசாரை தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, நடந்த வாக்குவாதத்தில், பெண் போலீசார் சிலர், நரிக்குறவ பெண்களைத் தாக்குவது போன்ற காட்சிகளும் இணையத்தில் வெளியகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து தங்களை இழிவுபடுத்தும் போக்கு நடந்து வருவதாக கலங்கி சொல்கிறார்கள் நரிக்குறவர் இன மக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+