தாய் பத்திரம்.. ரொம்ப மேஜர் டாக்குமெண்ட்.. மூலப்பத்திரம் தொலைஞ்சிட்டா என்ன செய்யணும்? இதுதான் ரூட்
சென்னை: தாய் பத்திரம் என்றால் என்ன தெரியுமா? இந்த மூலப்பத்திரம் தொலைந்துவிட்டால், அதை உரிமையாளர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? சொத்து பத்திரங்கள் தொலைந்துவிட்டால், அதன் நகல்களை எப்படி ஆன்லைனில் பெற வேண்டும் தெரியுமா? ரொம்ப சிம்பிள்.
தமிழகத்தில் பெரும்பாலான துறைகள் ஆன்லைன் மயமாகிவிட்டன.. அதிலும் பொதுமக்களின் வசதிக்காகவே, அரசு துறைகள் ஆன்லைன் மூலம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நேரம் மிச்சமாகும்.. வீண் அலைச்சல் தேவையில்லை. எந்த துறையிலுமே இடைத்தரகர்களுக்கும் வேலையில்லை.. வேலைகளும் எளிதாக முடிகின்றன.

வீண் அலைச்சல்: உதாரணத்துக்கு, பத்திரப்பதிவு துறையை எடுத்து கொண்டால், ஒரு பத்திரம் தொலைந்து போனால்கூட, அல்லது பழைய சொத்து பத்திரம் நகல் எடுக்க வேண்டுமானால், அவைகளை மீட்டெடுக்க நிறைய அலைச்சல் தேவைப்பட்டது..
தாலுகா அலுவலகத்துக்குதான் நேரில் செல்ல வேண்டும்.. அங்கே அவர்கள் கேட்கும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை திரட்டுவதற்கு இதற்கு பலநாள் அலைந்து திரிய வேண்டும்.. அதற்கு பிறகே, உரிமையாளர்கள் தங்களது சொத்து பத்திர நகலை பெறுவார்கள்.
பத்திரப்பதிவு: ஆனால், இப்போது அப்படியில்லை.. தொலைந்த பத்திரத்தையும் ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.. அதுவும் பத்திர ஆபிஸ் போகாமலேயே, வீட்டுக்குள்ளிருந்தே தொலைந்து போன பத்திரத்தின் நகலை பெற முடியும். ஆனால், தாய் பத்திரம் பத்திரம் தொலைந்து போய்விட்டால் இதற்கு சில வழிமுறைகள் உள்ளன..
தாய்ப்பத்திரத்தை, மூலப்பத்திரம் அதாவது parent document என்று சொல்வார்கள்.. இது மிகவும் முக்கியமான ஆவணம்.. முதல் முதலாக குறிப்பிட்ட சொத்தை வாங்கியவர், அதை யாரிடமிருந்து வாங்கினார், என்பதே தாய்ப்பத்திரம்..
வழிமுறைகள்: சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கியது. 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பத்திரங்கள் என்பதால், இந்த பத்திரங்கள் நிச்சயம் காணாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு.. தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
- தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்ததோ, அந்த ஊரிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் உடனே பத்திர விவரத்தை குறிப்பிட்டு, "காணவில்லை" என்று புகார் தர வேண்டும்.
- காவல் அதிகாரியின் கையொப்பம், காவல் நிலைய முத்திரையுடன், புகாரை பெற்றுக்கொண்ட ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்..
- 2, 3 நாட்கள் தேடிப்பார்த்தும் பத்திரம் கிடைக்காமல் போனால், காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும். இந்த எப்ஐஆர் அறிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- காணாமல் போன ஆவணத்தை யாராவது கண்டெடுத்து ஒப்படைக்கிறார்களா? என்பதை காவல்துறை ஆராயும். மற்றொருபக்கம் காணாமல் போன ஆவணம் குறித்த விசாரணையையும் மேற்கொள்ளும்.
- தாய் பத்திரம் கிடைக்காவிட்டால், "கண்டுபிடிக்க முடியவில்லை" (Non Tracable) என்று சான்றிதழை காவல் நிலையத்தில் தருவார்கள்
- இந்த சான்றிதழுடன், நீங்கள் வழக்கறிஞரை அணுக வேண்டும். "பத்திரத்தை காணவில்லை, கண்டெடுப்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்" என்று தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளிலும், 2 பிரபலமான பத்திரிகைகளில் அவர் விளம்பரம் செய்வார்.
- 15 நாட்களுக்குள் ஆவணங்கள் கிடைத்தால் அதை வழக்கறிஞர் உங்களிடம் ஒப்படைப்பார். ஆவணம் கிடைக்காவிட்டால், ஆவணத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைக்கப்பட்ட சான்றிதழை வழக்கறிஞர் தருவார்.. அதை நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட சொத்தினை பிரச்சனையில்லாமல் அனுபவிக்கலாம்.
இதெல்லாம் அடிப்படையான ஒருசில வழிமுறைகள் என்றாலும், உங்கள் வழக்கறிஞர் அல்லது காவல்துறையினரிடம் அணுகினால், இதுகுறித்து விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
வழிமுறைகள்: மொத்தத்தில், நோட்டரி உறுதி மொழி பத்திரம், பத்திரிகை விளம்பரம் நகல், போலீஸ் ஸ்டேஷன் புகார் மனு, எப்ஐஆர், NOT TRACABLE சான்றிதழ் இப்படி 6 ஆவணங்களும் கையில் இருந்தால்தான், நீங்கள் பெற்றிருக்கும் "நகல் பத்திரம்", தொலைந்துபோன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications