ரம்ஜான் வரப்போகுது.. சென்னையில் எங்கெல்லாம் இப்தார் சாப்பிடலாம் தெரியுமா? இந்த ரீல்ஸை பாருங்க
சென்னை: ரம்ஜான் வர உள்ள நிலையில் சென்னையில் இன்னும் 2-3 நாட்களுக்குத்தான் இப்தார் உணவுகளை உண்ண முடியும். இப்படிப்பட்ட நிலையில் சென்னையில் எங்கெல்லாம் இப்தார் சாப்பிட முடியும் என்று ஒரு சின்ன ரவுண்ட் அப் பார்க்கலாமா!

ரம்ஜான் மாதம் முடியப்போகிறது.. ரம்ஜான் பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த மாதம் முழுக்க இஸ்லாமியர்கள் நோன்பிற்கு பிறகு நோன்பு துறக்க பல வகையான உணவுகளை உண்பார்கள். இப்தார் என்பது நோன்பிற்கு பின் உண்ணத் தொடங்கும் நேரம் ஆகும். இந்த இப்தாருக்கான உணவுகள் ஒவ்வொரு வருடமும் டிரெண்ட் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் சென்னையில் பல விதமான இப்தார் உணவுகள் டிரெண்டாகின.

ரம்ஜான் வர உள்ள நிலையில்.. இன்னும் 2-3 நாட்களுக்குத்தான் இப்தார் உணவுகளை உண்ண முடியும். சென்னையின் பல பகுதிகளில், குறிப்பாக மன்னடி, பட்டினப்பாக்கம், வடபழனி, ராயப்பேட்டை, பெரியமேடு, மற்றும் தேனாம்பேட்டையில், ரம்ஜான் காலத்தில் சிறப்பு இப்தார் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.

முக்கியமாக நோன்பு கஞ்சி, மட்டன் கீமா, சிக்கன் ஹாங்கமா, மட்டன் மஸா, ப்ரான் உணவுகள், சமோசா, குஸ்கா, கேப்ஸ் மற்றும் ஷவர்மா, முட்டை பொரியல், மற்றும் மட்டன் சிக்கன் கிரில் ஆகியவை சென்னையில் இப்தார் சாலை உணவுகளாக விற்கப்படுகின்றன.
மேலும், இனிப்பு வகைகளில் சூடான ஜிலேபி, பாசந்தி, பாதாம் பால், பாலில் செய்யப்பட்ட பல வகையான உணவுகள் மற்றும் இளநீர் பாயாசம் ஆகியவை விற்கப்படுகின்றன.
சென்னையில் இருக்கும் முஸ்லிம் ஹோட்டல்களில் மட்டுமல்லாது, தெருவோர கடைகளிலும், சிறப்பான இப்தார் உணவுகள் கிடைக்கும். இந்த ரம்ஜான் மாதத்தில் நீங்கள் சாப்பிட வேண்டிய சிறப்பான, நல்ல இப்தார் உணவுகள் எங்கே கிடைக்கும்.. எப்படி வாங்குவது.. என்பதை இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications