வெளிநாட்டில் படித்த மருத்துவர்கள் - பயிற்சிக்கு சேர வாய்ப்பு வழங்கவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!
சென்னை: வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு மீது, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவ்வப்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். அதன்படி, நேற்று, மருத்துவர்களின் போராட்டம் குறித்து, தமிழக அரசை விமர்சித்தார். கொரோனா காலத்தில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சேவையாற்றிய அரசு மருத்துவர்களை போராட வைக்கலாமா என கேள்வி எழுப்பினார்.

ஊதிய உயர்வுக்காகவும், நியாயமான கோரிக்கைகளுக்காகவும் அரசு மருத்துவர்களை போராட வைப்பது தமிழக அரசுக்கு அவமானமாக தெரியவில்லையா? என்றும் அவர் விமர்சித்திருந்தார். மேலும், அரசு மருத்துவர்களை உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்த நூற்றுக்கணக்கானோருக்கு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர தமிழக அரசு வாய்ப்பு வழங்கவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக திரு. முதல்வர் ஸ்டாலின் அவர்கள், தேர்தலுக்கு முன்பு அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்த வரிசையில், வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு, இந்தியாவில் சேவை செய்வதற்காக FMG தேர்வை எழுதி, தேர்ச்சிபெற்ற நூற்றுக்கணக்கானோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவராக சேர்வதற்கான வாய்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக, கடந்த ஜுலை மாதம், மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை. எத்தனையோ வாக்குறுதிகளைப் போல, திமுக-வினர் இதனையும் காற்றில் பறக்கவிட்டு விடுவார்களோ? என்றும் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications