சென்னை ஏர்போர்டிலேயே என்ட்ரி ஆயிடுச்சா.. என்னங்க சொல்றீங்க.. அதிர்ந்த பயணிகள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். யாரும் எளிதில் நுழைய முடியாத சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பினை மீறி நாய்கள் புகுந்திருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையம் இந்தியாவின் மிக முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்று. டெல்லி, மும்பைக் பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு அடுத்தபடியாக மிகவும் பிஸியான ஐந்தாவத சர்வதேச விமான நிலையமாக சென்னை விமானநிலையம் இருக்கிறது.

தமிழ்நாடு , ஆந்திரப் பிரதேசம் , தெலுங்கானா , கர்நாடகா , கேரளா மற்றும் புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவிற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) தெற்கு பிராந்திய தலைமையகமாக சென்னை விமான நிலையம் செயல்படுகிறது . சென்னை விமான நிலையம் காலத்திற்க ஏற்ப விரிவாக்கம் செய்யப்படாத காரணத்தால் ஹைதாபாத், பெங்களூர் விமான நிலையங்கள் சென்னை விமான நிலையத்தை விட பெரிய விமான நிலையமாக வளர்ந்துவிட்டன.
சென்னை விமான நிலையத்திற்கு தினமும் பல்லாயிரம் பயணிகள் வந்து செல்கிறார்கள். உள்நாடு மற்றும் வெளிநாடு செல்ல ஒரே இடத்தில் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை விமான நிலையம் 100 ஆண்டுகளை தாண்டிய புகழ் பெற்ற சர்வதேச விமான நிலையமாக உள்ளது. இங்கு சர்வ சாதாரணமாக தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். சென்னை விமான நிலைய நுழைவு வாயிலில் அச்சுறுத்தும் வகையில் உலா வரும் நாய்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications