குழந்தைகளுக்கு காய்ச்சல், சளியா?.. மெடிக்கல் ஷாப்பில் சுய மருந்து வாங்குவோரா.. உஷார்! இதை படிங்க!
சென்னை: குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டால் சுய மருத்துவமோ மெடிக்கல் ஷாப் கடைக்காரரையோ அணுக கூடாது என்றும் அதனால் என்னென்ன ஏற்படும் என்பது குறித்தும் சிவகங்கை அரசு பொது மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா விழிப்புணர்வு பதிவை போட்டுள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் தனது ஒரு வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என ஒரு பெண்மணி அழைத்து வந்திருந்தார். காய்ச்சல் சனிக்கிழமையிலிருந்து அடிப்பதாகக் கூறினார்.
சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பிய இவரது கணவர் மெடிக்கல் ஸ்டோரில் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் சளி என்று கூற அவர்களும் இரண்டு டானிக்குகள் கொடுத்துள்ளனர்.

காய்ச்சல்
இருமலுக்கு ஒன்று காய்ச்சலுக்கு ஒன்று என காய்ச்சல் டானிக் மற்றும் இருமல் டானிக் இரண்டையும் 2.5 மில்லி கொடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். இதில் காய்ச்சல் டானிக்கை 2.5 மில்லி கொடுக்கச் சொன்னது ஓரளவு சரியே, காரணம் அந்த பையனின் எடை 8 கிலோ, பாராசிடமால் கொடுக்க வேண்டிய அளவு குழந்தையின் எடையை (கிலோ) பதினைந்தால் பெருக்கினால் கிடைக்கும்.

ஆறு மணி நேரம்
இவ்வாறு ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம் . இந்த குழந்தைக்கு 8 ( குழந்தையின் எடை) * 15 = 120 மில்லி கிராம் கொடுக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை 120 மில்லி கிராம் பாராசிடமால் கொடுக்கலாம். அந்த மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர் கொடுத்த காய்ச்சல் டானிக்கில் 5 மில்லியில் 250 கிராம் பாராசிடமால் அடங்கியிருக்கிறது.

விபரீதம்
ஆகவே 2.5 மில்லி = 125 மில்லி கிராம் கொடுக்கச் சொன்னது சரி. ஆனால் விபரீதம் எங்கு வருகிறது பாருங்கள். கூட சளி இருமலுக்கு என ஒரு டானிக்கை கொடுத்துள்ளார்கள். அதில் சளி இருமலை நிறுத்த வேண்டிய மருந்துகளின் ஊடே பாராசிடமாலும் கலந்திருக்கிறது. அதிலும் 2.5 மில்லி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்.

இடைவெளிவிட்டு
அந்த டானிக்கில் 5 மில்லியில் 125 மில்லி கிராம் பாராசிடமால் இருக்கிறது. ஆக, 2.5 மில்லியில் 62.5 கிராம் பாராசிடமால் இருக்கும். மேலும் எப்போதெல்லாம், எந்த கால இடைவெளியில் இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்க வேண்டும் என்று கூறி அனுப்பவில்லை.
இதனால் ஒவ்வொரு முறை இந்த இரண்டு டானிக்கையும் கொடுக்கும் போதும் தேவைக்கு மீறி 62.5 கிராம் பாராசிடமால் ஓவர் டோசாக குழந்தைக்கு இரண்டு நாட்களாக கிடைத்துள்ளது.

வயிற்று வலி
என்னிடம் குழந்தையை அழைத்து வரும் போது வாந்தி , வயிற்று வலி இருந்தது. அதற்கு காரணம் தகுந்த மருத்துவரை நாடாமல் மெடிக்கல் ஸ்டோரை நம்பி சிகிச்சை அளித்ததே என்று ஆணித்தரமாக கூறலாம். குழந்தைகளுக்கு பாராசிடமால் ஓவர் டோஸ் ஆனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் வரை கூட எளிதில் சம்பவிக்கும். மருத்துவத்திற்கு தகுதியான மருத்துவர்களை தேர்ந்தெடுப்போம். மருந்தகங்களில் மருத்துவர்களின் பரிந்துரையோடு மட்டும் மருந்துகள் பெறுவோம். சுய மருத்துவம் கேடு விளைவிக்கும். குழந்தைகள் உயிரோடு விளையாட வேண்டாம். இவ்வாறு தனது பேஸ்புக் பதிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு டாக்டர் பரூக் அப்துல்லா பதிவு செய்துள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications