திவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்
பத்திரிகையாளர்கள் மீது டாக்டர் ராமதாஸ் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்
Recommended Video
சென்னை: "நான் பேசினது பேசினதுதான்.. பத்திரிகையாளர்கள் பத்தி நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.. திவ்யா அப்பா இறந்தது பத்தி யாராவது செய்தி போட்டாங்களா?" என்று டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
2 தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்ப் படப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசும்போது, தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும், பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கடிந்துகொண்டார்.
ஆனால் அப்போது பத்திரிகையாளர்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி திட்டியிருந்தார். "நாய்ங்களா.. சண்டாள பசங்களா.. என்றெல்லாம் வெகு சரளமாக சொல்லினார். 40 வருட அரசியலில் உள்ள ஒரு கட்சி தலைவர், அதிலும் டாக்டர்.. இப்படியெல்லாம் பேசுவாரா? பேசுவது சரிதானா? என்ற அதிர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டது.

திட்டவட்டம்
டாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

திட்டவட்டம்
டாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

ஆர்எஸ்எஸ்
"பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதுணையாக இருப்பதை போல, பாமகவுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை பலமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி தர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

அநியாயம்
அன்புமணி என்ற நல்ல இளம் தலைவரை தமிழகத்துக்கு பாமக கொடுத்திருக்கிறது. அநியாயம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடும்.

ஊடகங்கள்
பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியது பேசியதுதான். என் கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து ஒரு வரி கூட ஊடகங்கள் செய்தி போடவில்லை. ஆனால் இளவரசன் தற்கொலையை கொலை என்று கூறி எங்கள் மீது பழி போடுகின்றன" என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை ராமதாஸ் தாக்கி பேசி வருவது, ஊடக துறையில் பெரிய அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
அரசியல் முட்டு சந்தில் ராமதாஸ்.. அதிமுகவுடன் கூட்டணியா? கேட்டை மூடிய எடப்பாடி.. அடிவருடிகள் அப்செட்! -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications