திவ்யா அப்பா பத்தி செய்தி போட்டீங்களா.. நான் பேசினது பேசினதுதான்.. மாத்திக்க மாட்டேன்.. ராமதாஸ் அடம்
பத்திரிகையாளர்கள் மீது டாக்டர் ராமதாஸ் மீண்டும் குற்றம்சாட்டி உள்ளார்
Recommended Video
சென்னை: "நான் பேசினது பேசினதுதான்.. பத்திரிகையாளர்கள் பத்தி நான் சொன்ன கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன்.. திவ்யா அப்பா இறந்தது பத்தி யாராவது செய்தி போட்டாங்களா?" என்று டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
2 தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழ்ப் படப்பாளிகள் பேரியக்கம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசும்போது, தன்னிடம் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புவதாகவும், பலமுறை பதில் அளித்தும் மீண்டும் மரம் வெட்டியது பற்றியே கேள்வி எழுப்புகிறார்கள் என்றும் கடிந்துகொண்டார்.
ஆனால் அப்போது பத்திரிகையாளர்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளை சொல்லி திட்டியிருந்தார். "நாய்ங்களா.. சண்டாள பசங்களா.. என்றெல்லாம் வெகு சரளமாக சொல்லினார். 40 வருட அரசியலில் உள்ள ஒரு கட்சி தலைவர், அதிலும் டாக்டர்.. இப்படியெல்லாம் பேசுவாரா? பேசுவது சரிதானா? என்ற அதிர்ச்சி மக்களுக்கு ஏற்பட்டது.

திட்டவட்டம்
டாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

திட்டவட்டம்
டாக்டர் பேசிய இந்த வீடியோ இணையத்திலும் வைரலாகி, சர்ச்சையானது. இந்நிலையில்தான் சென்னையில், பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராமதாஸ், பத்திரிகையாளர்கள் பற்றி தான் சொன்ன கருத்தை திரும்ப பெற போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

ஆர்எஸ்எஸ்
"பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுதுணையாக இருப்பதை போல, பாமகவுக்கு வழக்கறிஞர்கள் சமூக நீதி பாதுகாப்பு பேரவை பலமாக இருக்க வேண்டும். வெறுப்பு அரசியலுக்கு வழக்கறிஞர்கள் பதிலடி தர வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரி விரைவில் போராட்டம் நடத்தப்படும்.

அநியாயம்
அன்புமணி என்ற நல்ல இளம் தலைவரை தமிழகத்துக்கு பாமக கொடுத்திருக்கிறது. அநியாயம் எங்கு நடந்தாலும் அங்கு சென்று சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடும்.

ஊடகங்கள்
பத்திரிகையாளர்கள் குறித்து நான் பேசியது பேசியதுதான். என் கருத்துக்களை நான் மாற்றிக்கொள்ள மாட்டேன். இளவரசன் விவகாரத்தில் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்துகொண்டது குறித்து ஒரு வரி கூட ஊடகங்கள் செய்தி போடவில்லை. ஆனால் இளவரசன் தற்கொலையை கொலை என்று கூறி எங்கள் மீது பழி போடுகின்றன" என்றார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்களை ராமதாஸ் தாக்கி பேசி வருவது, ஊடக துறையில் பெரிய அதிர்ச்சி கலந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications