இடைவிடாது கொட்டிய கனமழை.. சென்னை சாலையில் நீந்தி செல்லும் வாகனங்கள்.. வடியவைக்க இன்னும் வேகம் தேவை
சென்னை: சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகனங்கள் நீந்தி செல்லும் நிலை உருவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருகிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதலே தொடர் மழை பெய்து வந்தது. நேற்று அதிகாலை முதல் விடாமல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், நேற்று காலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல் புரசைவாக்கம், ஓட்டேரி, வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் சிரமங்களை சந்தித்தனர்.

இடைவிடாது பெய்த கனமழை
இந்த நிலையில் நேற்று இரவிலும் கனமழை தொடர்ந்து பெய்தது. இரவு 10 மணியளவில் தொடங்கிய கனமழை, அதிகாலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. புதுவண்ணாரப்பேட்டை, வ.உ.சி. நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதேபோல் பட்டாளம் ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

குளம் போல் மாறிய சாலைகள்
இதேபோல் சென்னையின் முக்கியப் பகுதியான கிண்டி கத்திப்பாரா பாலத்திற்கு கீழ் கனமழையால் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. கிண்டி சிப்காட் எதிரே உள்ள சாலையில் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தினந்தோறும் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆனால் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அந்த சாலை குளம் போல் காட்சியளிக்கிறது.

நீந்தி செல்லும் வாகனங்கள்
இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் நீந்தி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே சாலையை கடந்து போக முடியும் என்ற நிலை இருக்கிறது. இருசக்கர வாகனத்தில் வரும் ஏராளமானோர், தங்களது வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதேபோல் பூவிருந்தமல்லி பகுதிகளில் உள்ள ஏராளமான தெருக்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது.

மக்கள் அவதி
கடந்த வாரத்தில் பெய்த மழையை காட்டிலும் கடந்த இரு நாட்களாக அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் அதிகளவில் தேங்குவதால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications