Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய "சதி".. எஸ்.பி வேலுமணிக்கு கடிவாளம் போடும் "ஸ்டாலின்"? லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்பி. வேலுமணி மீது புகார் உள்ளது.

இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. 60 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை தொடர்ந்து மொத்தம் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் முதல்வர் ஸ்டாலினும் தீவிரமாக கவனம் செலுத்தினார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த ரெய்டில் பல்வேறு முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கான்டிராக்டர் திருவேங்கடம் கொடுத்த புகார், திமுக ஆர்.எஸ் பாரதி வழக்கு மற்றும் அறப்போர் இயக்கம் தொடுத்த வழக்குகளின் விளைவாக முதல் ரெய்டு நடந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது முறையாக இதே வழக்கின் அடிப்படையில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் 3வது வழக்கு ஒன்றும் எஸ்.பி வேலுமணி மீது போடப்பட்டது.

வழக்கு

வழக்கு

கடந்த முறை இந்த ரெய்டின் போது அது தொடர்பான தகவல் முன்பே வேலுமணி தரப்பிற்கு தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இவரது வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் அப்போது பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய கோரி வேலுமணி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்கின் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வேலுமணி கோரிக்கை

வேலுமணி கோரிக்கை

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையும் இதில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அளித்துள்ள பதில் மனுவில் எஸ்.பி வேலுமணி மீதான வழக்குகளை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதில், விசாரணை நடைபெற்று வருகிறது. எஸ்.பி வேலுமணி அமைச்சராக இருந்த போது மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்துள்ளார். ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

அரசு ஒப்பந்தம்

அரசு ஒப்பந்தம்

அரசு ஒப்பந்த பணிகளை செய்வதற்காக பி செந்தில் அண்ட் கோ என்ற பெயரில் இவர் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். பதவியை பயன்படுத்தி இவர் டெண்டர்களை முறைகேடாக வழங்கி உள்ளார். வேலுமணிக்கு நெருக்கமானவர்ளுக்கு டெண்டர் முறைகேடாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இது முழுக்க முழுக்க விதிமீறல். ஏராளமான அரசு பணத்தை அபகரிக்க இவர் மிகப்பெரிய சதி செய்துள்ளார். அதனால் வேலுமணி மீதான வழக்கை ரத்து செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+