வழக்கமான பரிசோதனை.. சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்!
ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
சென்னை: இன்று மாலை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார்.
Recommended Video
ஆஞ்சியோ சிகிச்சை பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். காலையில் இருந்து அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏற்கனவே அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. 2018-ல் கோவை கணமதி காந்திமாநகர் பகுதியில் உள்ள தனியார் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் முதுகுவலிக்கு சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
அங்கு அவருக்கு ஆயில் மசாஜ், ஸ்டீம் பாத், எண்ணெய் குளியல் உள்பட பல்வேறு ஆயுர்வேத புத்துணர்வு சிகிச்சைகள் தரப்பட்டன. இதற்காக ஒரு வாரம், 5 நாட்கள் என பலமுறை கோவை ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு சென்னை தனியார் மருத்துவமனையில் துணை முதல்வர் திடீரென அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ சிகிச்சை தொடர்பான பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நேற்றிரவு ஆஞ்சியோ சிகிச்சை பரிசோதனை முடிந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று துணை முதல்வரை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.. அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களும் சென்று துணை முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை தனியார் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடு திரும்பினார். வழக்கமான சோதனைகள் முடிந்த நிலையில் அவர் வீடு திரும்பினார்.
நாளைய தினம் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளார். இந்நிலையில் துணை முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications