Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்போ பிரியா, இப்போ ஜோதியா? ராஜீவ்காந்தி மருத்துவமனை சிகிச்சை.. இபிஎஸ் சரமாரி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு கை அகற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனத். இவரது மனைவி ஜோதிக்கு கடந்த சில நாட்களாக நெஞ்சு வலி இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அவர் கடந்த 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ செய்து பார்த்ததில் இதயத்தில் அடைப்பு ஏதும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், ரத்தம் உறைதல் பிரச்னை காரணமாக அவரது கைகள் கருமை நிறமாக மாறியிருந்தது.

Edappadi Palaniswami accused of wrongful treatment at Rajiv Gandhi Government Hospital, Chennai

எனவே உயிரை காப்பாற்ற ஜோதியின் வலது கை வெட்டி எடுக்கப்பட்டது. ஆனால் ஜோதிக்கு தவறான சிகிச்சை கொடுத்ததால்தான் கை வெட்டியெடுக்கப்பட்டிருக்கிறது என்றும், இதற்கு காரணமான மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை குறிப்பிட்டு தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தனது X சோஷியல் மீடியா பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இதய பரிசோதனைக்காக வந்த ஜோதி என்ற பெண்ணிற்கு முறையான சிகிச்சை அளிக்காததன் காரணமாக கை அகற்றப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

கடந்த ஆண்டு தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இதே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இந்த விடியா அரசின் அலட்சியத்தால் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவமும் ஏற்படுத்திய காயமே இன்னும் ஆறும் முன்னர் மீண்டும் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடந்திருப்பது, அலட்சியமும் அக்கறையின்மைக்கும் உதாரணமாக இருக்கும் இந்த விடியா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியுற்றது என்பதற்கான பெரும் எடுத்துக்காட்டு.

மக்களை காக்கும் கடமையில் இருந்து இந்த அரசு ஒவ்வொரு நாளும் தவறிச் செல்வதை வன்மையாக கண்டிப்பதுடன், அரசின் தவறான சிகிச்சையால் தனது கையை இழந்து தவிக்கும் திருமதி.ஜோதிக்கு உடனடியாக உரிய சிகிச்சை வழங்கவும், அவருக்கு தக்க இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இந்த விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+