அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட சூப்பர் கண்டிஷன்! உஷாரான மின் வாரிய அதிகாரிகள்! பின்னணி என்ன?
சென்னை: ஊரெங்கும் பரவலாக மழை பெய்து வரும் சூழலில் மின் வாரிய உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அழைத்து தடையின்றி மின் இணைப்பு வழங்குவது பற்றி அமைச்சர் செந்தில்பாலாஜி பாடம் நடத்தியிருக்கிறார்.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மின் வாரிய அதிகாரிகளுக்கு கறாராக பிறப்பித்துள்ளார்.
ஒவ்வொரு உயர் அதிகாரியின் செயல்பாடுகள் பற்றிய தரவுகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதால் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நம்மை பற்றி அமைச்சர் குறிப்பிடுவாரோ என மிகவும் உஷாராக அமர்ந்திருந்தார்கள்.

அமைச்சர் அறிவுறுத்தல்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் வாரிய மேற்பார்வை பொறியாளர்கள், தலைமைப் பொறியாளர்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறும், தேவையான JCB வாகனங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவுறுத்தியுள்ளார். பணியாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் அளித்து பாதுகாப்பான முறையில் மின் கட்டமைப்பை சீர்செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

ரெடியாக இருக்கணும்
மேலும் மின் வாரிய வாகனங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டதுடன் மின் வாரிய அதிகாரிகள் இயற்கை இடர்பாடுகளின் போது மாவட்ட நிர்வாகத்தினருடன் எப்போதும் தொடர்பில் இருக்குமாறும் ஐடியா வழங்கினார். மேலும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் குடிநீர் இணைப்புகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என அனைத்து அலுவலகர்களுக்கும் உத்தரவிட்டார்.

அதிகாரிகள் டேட்டா
ஒவ்வொரு உயர் அதிகாரியின் செயல்பாடுகள் பற்றிய தரவுகளை கையில் வைத்துக் கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வுக்கூட்டத்தில் பேசியதால், எங்கே நம்மை நோக்கி கேள்வி எழுமோ என்ற பதைபதைப்புடன் பலரும் அமர்ந்திருந்தனர். இதனிடையே அமைச்சர் எந்தக் கேள்வி கேட்டாலும் பதிலளிக்கும் வகையில் ஒரு சிலர் மட்டும் உஷாராக முன் கூட்டியே சில முன் தயாரிப்புகளுடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

1,40,000 மின் கம்பங்கள் தயார்
இதனிடையே இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொடர்ந்து மழை பெய்தாலும் பாதிப்பின்றி சீரான மின் விநியோகத்திற்காக ஏறத்தாழ 1,40,000 மின் கம்பங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மின்கம்பிகளை பொறுத்தவரை 9,500 கிலோ மீட்டர் மின்கம்பிகள் தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
இன்ஸ்டா இன்ப்ளூயன்ஸர்களுக்கு கன்டென்ட் போதும்.. மக்களுக்கு கரன்ட் கொடுங்க.. செந்தில் பாலாஜி காட்டம்












Click it and Unblock the Notifications