லட்டு போல் கிடைத்த தீர்ப்பு.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. அதிமுகவின் ஒற்றைத் தலைமையாகிறாரா இபிஎஸ்!
சென்னை: அதிமுகவின் சட்டவிதிகளை திருத்த தடை ஏதும் உயர் நீதிமன்றம் விதிக்காததால் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருக்கிறது.
Recommended Video
அதிமுக பொதுக் குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் நாளை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த வரைவு தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரங்கள் இல்லை. இதுகுறித்து பொதுக் குழுவில் புதிதாக எதுவும் சேர்க்கக் கூடாது. அது போல் கட்சி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளக் கூடாது என வாதிட்டார்.

23 தீர்மானங்கள்
மேலும் 23 தீர்மானங்களை தவிர வேறு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றக் கூடாது என ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது. ஆனால் இதற்கு எடப்பாடி தரப்பு வழக்கறிஞர், பொதுக் குழுவில என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எதுவும் நடக்கும் நடக்காது என உத்தரவாதம் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.

அதிமுக பொதுக் குழு
சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுக பொதுக் குழு குறித்து ஓபிஎஸ் தரப்பும் ஈபிஎஸ் தரப்பும் தங்கள் காரசாரமான வாதங்களை முன் வைத்தன. இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு நடத்த தடை விதிக்க முடியாது என ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிமுக பொதுக் குழுவில் கட்சியின் சட்டவிதிகளை திருத்த தடை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தடை விதிக்க முடியாது
அது போல் பொதுக் குழு தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால தடையும் பிறப்பிக்க முடியாது. பொதுக்குழு விதிகளை திருத்துமாறு கோரும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி தெரிவித்துள்ளார். அதாவது ஓபிஎஸ் தரப்பு முன் வைத்த எந்த ஒரு விஷயத்தையும் கோர்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இது ஓபிஎஸ்ஸுக்கு பெருத்த பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

ஒற்றைத் தலைமை
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மகிழ்ச்சியில் உள்ளது. விதிகளை திருத்த தடையில்லை என்பதால் நாளை ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. எனவே எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிச்சாமியும் கட்சியிலும் ஆட்சியிலும் தலைவராவார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
எங்களுக்கா ஓட்டு இல்லை? நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக 9 இடங்களில் டெபாசிட் இழந்ததே! கிருஷ்ணசாமி பதிலடி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications