வரதட்சணை வழக்கு- மாஜி துணைவேந்தர் சேதுபதிக்கான சிறை தண்டனை ஓராண்டாக குறைப்பு
சென்னை: மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்துக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை ஓராண்டாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலுவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மோரனஹள்ளியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் 2002ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில தினங்களில் ராஜவேலு அமெரிக்கா சென்று விட்ட நிலையில், சேதுபதி ராமலிங்கம், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், சங்கீதா, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, மகன் ராஜவேல், மகள் மீனாட்சி அனுராதா, மருமகன் பரமேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சேதுபதி ராமலிங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. அதேசமயம், அவரது மனைவி ஜோதி, மகள் மற்றும் மருமகனை விடுவித்து தீர்ப்பளித்தது. சேதுபதி ராமலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சேலம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சேதுபதி ராமலிங்கமும், அவரை வரதட்சணை சட்டப்பிரிவில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், கீழமை நீதிமன்றங்கள் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, சேதுபதி ராமலிங்கத்தை குற்றவாளி என தீர்ப்பளித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.
மேலும், சேதுபதி ராமலிங்கத்திற்கு தற்போது 80 வயதாவதால், அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு தண்டனையை, ஓராண்டாகக் குறைத்தும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
அதேசமயம், வரதட்சணை குற்றச்சாட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி நிர்மல் குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
தமிழகத்தில் துரந்தர் 2 படத்தை தடை செய்ய நீதிமன்றத்தில் மனு.. இந்த ஒரு விஷயம் தான் பிரச்சனை! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications