டிராபிக் ஜாம்.. வெறுத்துப் போய் இவர் செஞ்சதை நீங்களும் ட்ரை பண்ணிடாதீங்க..!

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நபர் ஒருவர் செய்த அதிர்ச்சிகரமான செயல் வீடியோ வைரலாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் போக்குவரத்து நெரிசலால் சாலையை கடக்க முடியாமல் வெறுத்துப் போன நபர் ஒருவர், மின்சார ஒயர்களின் மீது ஏறி சாலையை கடந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனப் பெருக்கத்தால் வியட்நாம் தலைநகர் ஹாநோய் நகரில் உள்ள சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தத்தளிக்கின்றன. இதனால் பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு வெகு நேரம் பிடிக்கிறது. இதனால் மக்கள் வெறுத்து போகின்றனர்.

fed up with traffic man walks on power cables

அப்படி வெறுத்து போன ஒருவர் செய்த காரியம் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைத்துள்ளது. போக்குவரத்து நெரிசலில் காத்திருக்க பொறுமை இல்லாத அந்த நபர், மின்கம்பத்தில் ஏறி, மின்சார ஒயர்களின் மேல் நடந்து சாலையை கடந்துள்ளார்.

இதனை சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அந்த வீடியோ தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

மின்சார கம்பியில் நடக்கும் அந்த நபரை வியட்நாமின் ஸ்பைடர் மேன் என மக்கள் அழைக்கின்றனர். ஷாக் அடிக்காத வரைக்கும் அந்த நபரின் ஐடியா வேலைக்கு ஆகும் என சிலர் கமெண்ட் அடித்துள்ளனர்.

எது எப்படி இருந்தாலும், மின்கம்பிகளில் நடந்து அந்த நபர், ஒரே நாளில் வியாட்நாம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+