நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் திமுக எம்பி-க்களின் குரல் நாட்டுக்காகவும் தான்.. ஸ்டாலின் பேச்சு
சென்னை: நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் மணவழகர் மன்றத்தின் 63-ம் ஆண்டு முத்தமிழ் விழாவில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் தமிழுக்கு இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனையை முறியடிப்பதற்காக கட்சி, மதம், சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்று சேர வேண்டிய சூழல் இது என்று அவர் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி-க்களால் நாடாளுமன்றத்தில் சமத்துவம் சகோதரத்துவம் ஒலிக்க துவங்கியுள்ளது. தமிழகத்திற்காக மட்டுமின்றி இந்தியாவிற்காகவும் தான் திமுக எம்பி-க்கள் பேசுவதாக கூறினார்
தமிழக அரசியல் மேடைகளில் முழுமையாக தமிழை பேசிய அரசியல் தலைவர்களில் முதலாவது தலைவர் திரு.வி.க அவர்கள் தான். முழுமையாக தமிழைப் பேசி மேடைகளில் முழங்கியவர். அந்த குரல் தான் நாடாளுமன்றத்தில் இப்பொழுது ஒலிக்கத் துவங்கி இருக்கின்றது என குறிப்பிட்டார்.
மொழி தான் நம்மை இணைக்க கூடிய பந்தம். இந்தியில் நடத்திய தபால் துறை தேர்வை ரத்து செய்ய வைத்தது திமுக என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிசீலித்து கொண்டிருப்பதாக கூறினார். குழுவின் அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.
அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாம் மனிதர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்,
சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மைக்கு மட்டுடமல்ல அடிப்படை ஜனநாயகத்திற்கு கூட போராட வேண்டிய நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி












Click it and Unblock the Notifications