ஆம்னி பஸ்களில் உல்லாசம்.. சென்னை - கோவை உள்பட 4 ரூட்களை குறிவைத்த விபசார கும்பல்! திடுக் தகவல்
சென்னை: சென்னையில் இருந்து கோவை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களில் ஆணுறைகள், மதுப்பாட்டில்கள் சீட்டில் கிடப்பதோடு, விபசார கும்பல் இந்த 4 ரூட்டுகளை குறிவைத்து முன்பதிவு செய்து ஓடும் பஸ்சில் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவதாக திடுக்கிடும் தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நீண்ட தூர பயணங்களுக்கு மக்கள் விமானம், ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பணம் படைத்தவர்கள் விரைந்து செல்லும் வகையில் விமானங்களில் செல்லும் நிலையில் ஏழ்மையானவர்கள் குறைந்த செலவில் ரயில்களில் பயணிக்கின்றனர்.

அதேபோல் பலரும் அரசு பஸ், தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர். குறிப்பாக படுக்கை வசதி கொண்ட பஸ்களில் பலரும் பயணித்து வருகின்றனர். இந்த வேளையில் பஸ் பயணத்தின்போது பயணிகள் உடலுறவில் ஈடுபடும் சம்பவங்கள் குறித்து கண்டக்டர்கள், டிரைவர்கள் அடிக்கடி பேட்டியளித்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
இந்நிலையில் தான் சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் பஸ்களில் பயணிகள் போர்வையில் படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து உடலுறவு வைத்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இரவில் முனங்கல் சத்தம் கேட்கும் குறிப்பிட்ட படுக்கையில் இருந்து மறுநாள் கிடக்கும் ஆணுறைகள், மதுப்பாட்டில்கள் கிடப்பது அவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதற்கு சாட்சிகளாக அமைந்துள்ன.
இதுதொடர்பாக தற்போது Anti Vice Squad of Police எனும் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு ஆம்னி பஸ்களின் நிர்வாகம் சார்பில் புகார்கள் சென்றுள்ளன. இந்த புகார் பற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது பஸ்களில் விபசாரம் நடப்பது தெரியவந்துள்ளது. அதாவது உடல் சுகத்தை தேடுவோர் லாட்ஜ்கள், ஸ்பாக்களுக்கு சென்றால் போலீஸ் ரெய்டில் சிக்கலாம். இதில் இருந்து தப்ப ஒரு கும்பல் ஆம்னி பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது.
ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல்.. நடிகை பார்வதி பரபர அறிக்கை.. ஆதரவாளர்களுக்கு நன்றி என உருக்கம்
அதாவது விபசாரம் நடத்தும் கும்பல், வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பேசுகிறது. அந்த வாடிக்கையாளர் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் அவருக்கும், அவர் தேர்வு செய்யும் பெண்ணுக்கும் சேர்த்து ஆம்னி பஸ்களில் சேர்த்து புரோக்கர்கள் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அதன்பிறகு கணவன் - மனைவி என்ற பெயரில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். அவர்கள் பஸ்களில் பயணித்து உடலுறவு வைத்து கொள்கின்றனர்.
படுக்கை வசதி பஸ்களில் ஸ்கீரின் வசதி உள்ளதோடு, போலீஸ் தொல்லை இருக்காது என்பதால் அவர்கள் இதனை தேர்வு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரம் வரை ஒரு ட்ரிப்பிற்கு குறிப்பிட்ட நபரிடம் இருந்து விபசாரம் நடத்தும் கும்பல் வசூலிக்கிறது. இந்த பணப்பரிமாற்றம் என்பது யுபிஐ மூலம் நடக்கிறது. அதோடு விபசார புரோக்கர்கள் வாடிக்கையாளர்களுக்கு பெண்களின் போட்டோக்களை செல்போன் மூலம் பகிர்கின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஷாக்.. அரசு ஆசிரியர்கள் உள்பட 15,000 பேர் ஊதியத்துக்கு காத்திருப்பு.. ஏன்?
அதில் வாடிக்கையாளர் ஒரு பெண்ணை தேர்வு செய்யும் பட்சத்தில் பஸ்களில் இருவருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்து இந்த விவகாரம் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை எடுத்து கொண்டால் சென்னையில் இருந்து கோவை, ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்களில் அதிகளவில் இந்த சம்பவங்கள் நடக்கிறது.
மேலும் இந்த சம்பவங்களை தடுப்பது என்பது தனியார் ஆம்னி பஸ்களின் உரிமையாளர்கள் மற்றும் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. ஏனென்றால் இந்த செயலில் ஈடுபடுவோர் சிக்கினாலும் கூட காதலர்கள், கணவன் - மனைவி என கூறுகின்றனர். இது பஸ்களின் பணியாற்றுவோர் மற்றும் போலீசாருக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் இதுபோன்ற சம்பவங்கள் என்பது பிற பஸ் பயணிகளையும் முகம் சுளிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications